Don't Miss!
- News இந்தியக் குடியுரிமையைப் போராடிப் பெற்ற பெண்! நிஜத்தில் ஒரு ‘சர்க்கார்’ நாயகி!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மிஷ்கின் மீது தயாரிப்பாளர் கடுப்பு
நான் அவனில்லை படத்தைத் தயாரித்தவர் இத்தோஷ் ஜபக். தரம், படமாக்கம், வசூல் என அனைத்து விதத்திலும் இந்த ஆண்டின் ஒரே வெற்றிப் படம் என்ற பெருமைக்குரிய மிஷ்கினின் அஞ்சாதே படத்தையும் இவர்தான் தயாரித்தார்.
சமீபத்தில்தான் இந்தப் படம் நூறு நாட்கள் ஓடி முடித்தது. படத்தின் நூறாவது நாள் விழாவை சென்னை காமராஜர் அரங்கில் நடத்த முடிவு செய்திருந்தார் மிஷ்கின். இதுகுறித்து தயாரிப்பாளரிடம் பேசினார். அப்போது நான் அவனில்லை, அஞ்சாதே மற்றும் இப்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கும் பாண்டி ஆகிய மூன்று படங்களுக்கும் சேர்த்து முப்பெரும் விழாவாக எடுக்கலாம் என யோசனைத் தெரிவித்திருக்கிறார் இத்தேஷ் ஜபக்.
உடனே மிஷ்கின், அப்படியெல்லாம் பத்தோடு பதினொன்றாக இந்தப் படத்துக்கு விழா எடுக்க முடியாது. நீங்கள் வாருங்கள், இல்லாவிட்டால் நானே விழாவை என் சொந்த செலவில் நடத்திக் கொள்கிறேன், என்று கோபத்துடன் கூறிவிட்டாராம். இதனால் தயாரிப்பாளரான தான் இல்லாமல் மிஷ்கின் இந்த விழாவை நடத்தக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளார் ஜபக்.
ஆனால் இந்தப் புகாரையெல்லாம் கேட்கிற மூடில் இல்லை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள். அவர்களுக்கு தேர்தல் கவலை. அது முடிந்த பிறகுதான் எதைப் பற்றியும் பேச முடியும் என்று கூறிவிட்டார்களாம்.