சூப்பர் ஹிட் ஆகியுள்ள கொலை வெறிடி பாடலில் ரஜினியை தோன்ற வைக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இப்பாடல் ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டதாம்,. பாடலைக் கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்தாராம் ரஜினி.
எங்கு பார்த்தாலும் கொலைவெறியாகத்தான் இருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்காத காதுகளே இல்லை என்று கூறும் அளவுக்கு இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவிப் போய்க் கிடக்கிறது.
இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு இன்னொரு பெருமையும் சேரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அது ரஜினிகாந்த் இந்தப் பாடலில் தோன்றலாம் என்ற செய்தி.
இப்பாடலை ரஜினிக்குப் போட்டுக் காட்டியபோது விழுந்து விழுந்து சிரித்தாராம். ட்யூனையும், பாடல்வரிகளையும் பாராட்டித் தள்ளி விட்டாராம். இப்பாடல் மிகப் பெரிய ஹிட் ஆகும் என்றும் தனுஷிடமும், மகள் ஐஸ்வர்யாவிடமும் கூறினாராம் ரஜினி. அவர் சொன்னபடியே தற்போது பாடலும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
இப்போது இந்தப் பாடலில் ரஜினியைத் தோன்றவைக்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. இதுகுறித்து ரஜினியிடம், தனுஷும், ஐஸ்வர்யாவும் கோரிக்கை வைத்துள்ளனராம். இதுகுறித்து தனுஷிடம் கேட்டால், எங்களது எல்லா முயற்சிகளிலும் ரஜினி சார் இருந்தால் பெருமைதானே என்றார்.
3 படத்தில்தான் இந்த கொலைவெறிடி பாடல் இடம் பெறுகிறது. ஏற்கனவே படு பாப்புலராகி விட்ட இந்தப் படத்தை இயக்கியிருப்பது ரஜினியின் மகள் ஐஸ்வர்யா. ஹீரோவாக நடித்திருப்பது அவரது கணவர் தனுஷ். ஹீரோயினாக நடித்திருப்பது கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன். இந்த வரிசையி்ல ரஜினியும் சேர்ந்தால் இந்தப் பாடல் மிகப் பெரிய ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.
For a song that seems to have become the youth anthem of the nation, we'd think Why This Kolaveri Di has nailed every possible way to reach out to the world. But there's one thing Dhanush song is yet to achieve - the approval of his father-in-law, the legendary Rajinikanth. A source said, "Rajinikanth has loved Kolaveri and is clearly very happy and proud of the recognition the song is receiving. Now Aishwarya and Dhanush have requested him to do a special appearance in the film and most likely he will be doing it."
Story first published: Friday, December 2, 2011, 14:48 [IST]