twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    100 கலைஞர்களுக்கு விருது வழங்கிய கே.பாலச்சந்தர், ராம.நாராயணன்

    By Staff
    |

    Vimala Raman
    ஆங்கிலப் புத்தாண்டையொட்டி 100 நடிகர் நடிகையர் மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் மற்றும் இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் இந்த விருதுகளை வழங்கினர்.

    வி 4 எண்டர்டைனர்ஸ் நிறுவனம் வழங்கும் பாப்புலர் திரைப்பட விருதுகளுக்கான விழா, சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது.

    தினத்தந்தி, மாலைமலர், ஹலோ எப்.எம், மெடிமிக்ஸ், பாபுலர் அப்பளம், கலைஞர் டி.வி. ஆகிய நிறுவனங்கள் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

    விருதுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கே.ஆர்.ஜி, டைரக்டர் கே.பாலசந்தர், தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், நடிகை குஷ்பு ஆகியோர் வழங்கினார்கள்.

    நடிகர்கள் பிரபு, ஜெயம் ரவி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், பரத், பிரசன்னா, பசுபதி, பாண்டியராஜன், சாந்தனு, ஆர்.கே, விவேக், அலெக்ஸ், டாக்டர் ராம், மனோபாலா, நடிகைகள் சினேகா, விமலாராமன், விஜயலட்சுமி, கீர்த்திசாவ்லா, சரண்யா, கோவை சரளா, இயக்குநர்கள் சேரன், கே.எஸ்.ரவிகுமார், தரணி, சசி, ராதாமோகன், வெங்கட்பிரபு, ஜெயம்ராஜா, மிஸ்கின், பேரரசு, ஜி.சிவா, ஆதி மற்றும் ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், புதுமுக நடிகர்-நடிகைகள் உள்பட 100 பேர் விருது பெற்றார்கள்.

    சிறந்த கலை வித்தகருக்கான விருது பிலிம்நியூஸ் ஆனந்தனுக்கும், வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகள் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், நடிகை வைஜயந்திமாலா ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X