For Daily Alerts
Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'வயல்': வழக்கு போடும் ராணி!
Specials
-Staff
By Staff
|
2005ம் ஆண்டு அகமது நகர் மாவட்டம் ஷீரடியில் 11 ஆயிரம் சதுர அடி விவசாய நிலத்தை வாங்கினார் ராணி முகர்ஜி. ஆனால் இந்த நிலத்தை விவசாயி ஒருவருக்கு மாநில அரசு குத்தகைக்கு விட்டிருந்தது. எனவே இந்த நிலத்தை யாரும் வாங்க முடியாது. இதை அறியாமல் ராணி முகர்ஜி நிலத்தை வாங்கி ஏமாந்து விட்டார்.
இந்த நிலத்தை ரூ. 33 லட்சத்திற்கு வாங்கி, அதை ரூ. 1.32 லட்சத்திற்கு பதிவு செய்திருந்தார் ராணி. எனவே நிலத்தை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு மாநில அரசிடம் கோரியிருந்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்து விட்டது.
மேலும், ராணி முகர்ஜி வாங்கிய நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
இந்த நிலையில் அரசின் முடிவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட ராணி முகர்ஜி முடிவு செய்துள்ளார். இதை அவரே நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: சினிமா நடிகை நிலம் பாலிவுட் மும்பை ராணி முகர்ஜி ஷீரடி bollywood cinema rani mukerjee
Story first published: Wednesday, April 2, 2008, 15:25 [IST]
Other articles published on Apr 2, 2008