Don't Miss!
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- News எல்லா கோட்டையும் அழிங்க..என்னது எனக்கு ஓட்டு இல்லையா? ஷார்ப்பாக வந்து ஷாக் ஆன சூரி! என்னாச்சு?
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கமிஷன் தரவில்லை - விஜய டி.ராஜேந்தர், சிம்பு மீது வழக்கு
லட்சிய திமுக மதுரை மாவட்ட செயலாளராக இருந்தவர் பரமன். இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்தை விஜய. டி.ராஜேந்தருக்கு வாங்கிக் கொடுத்தேன். இதற்காக அவர் எனக்கு கமிஷன் தொகையாக ரூ.12 லட்சம் தருவதாக உறுதி அளித்திருந்தார். ஆனால் பணத்தை சொன்னபடி தரவில்லை.
பணம் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றபோது விஜய.டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா, உறவினர் வசந்தி ஆகியோர் பணம் தர மறுத்தனர். மேலும், அவரது மகனும், நடிகருமான சிம்பு என்னை மிரட்டினார்.
இது குறித்து மதுரை எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. இந்த மனு ஏற்கனவே ஒரு முறை தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.