Don't Miss!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- News நன்றி மறந்த நடிகர் சிரஞ்சீவி? ஆந்திராவில் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு.. காங்கிரசுக்கு ஷாக்
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நதியாவின் பட்டாளம்
புதிய இயக்குனர் ரோஹன் கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நதியா முக்கிய வேடத்தில் நடிக்க அருண், சத்யா, பாலாஜி, விகாஷ், சுரேஷ், அரி, விக்னேஷ், குரு, இர்பான் மற்றும் கிருபா ஆகிய 9 புதுமுகங்கள் அறிமுகமாகின்றன. கேரளத்தைச் சேர்ந்த ஜாஸி கிப்ட் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் ஆடியோ சென்னை சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. அதில் தயாரிப்பாளரான இயக்குனர் லிங்குசாமி பேசுகையில்,
முதல் படம், முதல் காதல் ஆகியவை வாழ்க்கையில் மறக்க முடியாதவை. முதல் படம் எனும்போது அதிலுள்ள அர்ப்பணிப்பு நூறு சதவீதம் முழுமையாக இருக்கும்.
இந்தப் படத்தில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்களே. எனவே தைரியமாக இந்தப் படத்தை தயாரிக்க நினைத்தேன். படமும் சிறப்பாகவே வந்துள்ளது.
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் நதியா மேடம் மிகவும் துடிப்புடன் காணப்படுகிறார், நடிக்கிறார்.
தமிழ்த் திரையுலகில் என்னை இதுபோன்று வியக்க வைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே. ஒருமுறை அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது எப்படி இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இது போன்ற வசீகரத்துடன் இருக்க முடிகிறது என்று கேட்டேன்.
1992க்கு பிறகு நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் என்னுடைய கடைசி படம் என்று நான் நினைத்துக் கொள்கிறேன். அதனால்தான் அவ்வாறு செயல்பட முடிகிறது என்று அவர் கூறினார்.
அது போலத்தான் ஒவ்வொரு படத்தையும் நான் என்னுடைய முதலாவது மற்றும் கடைசி படம் என்று நினைத்துக் கொள்கிறேன் என்றார்.
படத்துக்கு ஷீபா ரோஹன் திரைக்கதை எழுதியுள்ளார். வசனத்தை மோனா கவனிக்க, முத்துக்குமார், நெல்லை பாரதி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
படத்தின் இயக்குனரான ரோஹன் மலையாள-இந்திப்பட இயக்குனர்கள் பிரியதர்ஷன், சந்தோஷ் சிவன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.