Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பிரதீபா பாட்டீலுக்கு ராஷ்டிரபதி பவனில் 'ஸ்லம்டாக்' திரையீடு
இப்படத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத், அன்சாரி மற்றும் ஸ்லம்டாக் படக் குழுவைச் சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார், ரசூல் பூக்குட்டி உள்ளிட்டோர் பார்த்து ரசித்தனர்.
ராஷ்டிரபதி பவன் ஆடிட்டோரியத்தில் நேற்று மாலை ஸ்லம்டாக் திரையிடப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் படத்தைப் பார்த்து ரசித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், குடியரசுத் தலைவருடன் இணைந்து இப்படத்தை பார்க்க நேரிட்டது மிகவும் மகிழ்ச்சிக்குரியது, கவுரமாக உணர்கிரேன்.
இந்த நாட்டுக்காக நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்பதை இந்தப் படம் எனக்கு நினைவூட்டுகிறது. குறிப்பாக நலிவடைந்த சமுதாயத்தினருக்கு நாம் நிறையச் செய்ய வேண்டியுள்ளது.
இப்படத்தின் திரைக்கதை மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. அழகாக அது உருவாக்கப்பட்டிருந்தது. மேலும், படத்தின் இயக்குநர் டேனி பாயில், இப்படத்தின் இசையை மிகச் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். அவருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.
பாடலாசிரியர் குல்ஸார் கூறுகையில், குடியரசுத் தலைவருடன் இணைந்து படம் பார்த்தது பெருமையாக உள்ளது. இப்படத்தை நான் பலமுறை பார்த்து விட்டேன்.
இருந்தாலும் இன்று குடியரசுத் தலைவருடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன் என்றார்.
மத்திய அமைச்சர்கள் கிருஷ்ண தீரத், குமாரி ஷெல்ஜா, சல்மான் குர்ஷித், சிபிஐ இயக்குநர் அஷ்வினி குமார் மற்றும் பலரும் இந்த சிறப்பு திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.