டயரி எழுதுவதை விட்ட ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எளிமைக்கும், பெருந்தன்மைக்கும் பெயர் போனவர். அவருக்கு டயரி எழுதும் பழக்கம் உண்டு. தினசரி வாழ்க்கையில் தனது அனுபவங்களை எழுதி வைத்து வருகிறார்.
அன்றைய தினத்தில் தான் சந்தித்த அனுபவங்கள், நடந்த சம்பவங்கள் உள்ளிட்டவற்றை உள்ளது உள்ளபடியே எழுதுவது அவரது ஹாபி.
பின்னர் அதைப் படித்துப் பார்த்து தன் மீது ஏதாவது குற்றம், குறை இருந்தால் திருத்திக் கொள்வாராம் சூப்பர் ஸ்டார்.
சிவாஜி படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட தினசரி அனுபவங்களையும் அவர் எழுதி வைத்து வந்தார். பின்னர் மேக்கிங் ஆப் சிவாஜி என்ற நூலை எழுதிய ஒருவருக்கு, ரஜினியின் இந்த டயரி பழக்கம் வெகுவாக உதவியதாம்.
இதுகுறித்து கேள்விப்பட்ட ஷங்கர், சிவாஜி குறித்து யாருக்கும் தெரிவித்து விட வேண்டாம் என ரஜினியை கேட்டுக் கொண்டாராம்.
ரஜினி நினைத்திருந்தால் ஷங்கர் கோரிக்கையை லூஸில் விட்டிருக்க முடியும். இருந்தாலும், ஷங்கர் கேட்டுக் கொண்டாரே என்பதற்காக அதை உடனே ஏற்றுக் கொண்டாராம். அத்தோடு நில்லாமல், டயரி எழுதுவதையே தற்காலிகமாக நிறுத்தி விட்டாராம்.
இதுகுறித்து ஷங்கர் கூறுகையில், இதுதான் ரஜினி. அவர் நினைத்திருந்தால் நான் கூறியதை நிராகரித்திருக்க முடியும். என்னாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஆனால் ரஜினி அப்படிச் செய்யவில்லை. என்னை ஏமாற்றவோ, நிராகரிக்கவோ அவர் விரும்பவில்லை. மாறாக டயரி எழுதுவதையே நிறுத்தி கொண்டார் என்று கூறியுள்ளார்.
இதேபோல, எந்திரன் படப்பிடிப்பு குறித்த தகவல்களை உங்களது கணவரிடம் கூட தெரிவித்து விட வேண்டாம் என ஐஸ்வர்யா ராயிடம் ஷங்கர் கேட்டுக் கொண்டுள்ளாராம்.
எந்திரன் படத்திற்காக 200 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ஐஸ்.


Click it and Unblock the Notifications











