Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கன்னடப் படம் இயக்கும் சுஹாசினி!
அனந்த நாக்கின் கன்னடப் படத்தில் நடித்து வரும் சுஹாசினி, அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போதுதான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
இந்தப் படத்தில் விஷ்ணுவர்தன் நாயகனாக நடிக்கிறார். அவர் கூறுகையில், "நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு கன்னடப் படம் இயக்கும் ஆர்வம் உள்ளது. விஷ்ணுவர்தன் என்னை நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறார். ஆனால் என் மகன் படிப்பு முடியட்டுமே என்று காத்திருந்தேன். இப்போது சுதந்திரமாகிவிட்டேன். படம் இயக்கும் நேரம் வந்துவிட்டது.
அடுத்த ஆண்டு அந்தப் படம் ரிலீஸாகும். நிச்சயம் கன்னட ரசிகர்கள் விரும்பும் வகையில் அந்தப் படம் அமையும்" என்றார் அவர்.
1984ம் ஆண்டிலிருந்தே சுஹாஸினி தொடர்ந்து கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.
சுஹாசினி மீது ஷக்தி சிதம்பரம் தாக்கு..
இந் நிலையில் என்னம்மா கண்ணு, சார்லின் சாப்ளின், மகா நடிகன், இங்கிலீஸ்காரன், சண்ட உள்பட பல படங்களை தயாரித்து, இயக்கியுள்ள ஷக்தி சிதம்பரம் சமீபத்தில் லாரன்ஸை ஹீரோவாக்கி, மீனாட்சி, காம்னாவை கதாநாயகிகளாக்கி இயக்கிய ராஜாதி ராஜா படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.
இந்தம் படம் குறித்து ஒரு தொலைக்காட்சியில் சுஹாசினி திரை விமர்சனம் செய்திருந்தார். அதில் படத்தையும், ஷக்தி சிதம்பரத்தையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனால் கடுப்பாகியுள்ள ஷக்தி சிதம்பரம் நிருபர்களிடம் பேசுகையில்,
ராஜாதி ராஜா 3வது வாரத்தை நோக்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 4 நாட்களுக்கு முன்பு சுஹாசினி தனது திரை விமர்சனத்தில், இந்த படத்தை விமர்சனம் செய்வதையே கேவலமாக நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அந்த காலத்தில் எம்.ஜி.ஆரும், அதையடுத்து ரஜினியும், அதையடுத்து விஜயும் செய்து வரும் கமர்சியல் பார்முலாவை லாரன்சை வைத்து ஷக்தி சிதம்பரம் கூத்தடித்திருக்கிறார் என்றும் 20 வருடங்களுக்கு முன்பு வர வேண்டிய படம் இது என்றும் கூறியிருக்கிறார்.
20 வருடங்களுக்கு முன்புள்ள கதையைத்தான் நான் டைரக்டு செய்திருக்கிறேன். ஆனால், அவருடைய கணவர் மணிரத்னம் 2000ம் வருடங்களுக்கு முன் வந்த ராமாயண கதையைத் தானே, ராவணா' என்ற பெயரில் படமாக்கி வருகிறார்.
சத்தியவான்-சாவித்ரி கதையைத்தான் ரோஜா படமாக மணிரத்னம் எடுத்தார். அந்த 7 நாட்கள் படத்தைத் தானே மெளன ராகமாக எடுத்தார். கர்ணன் படத்தைத் தானே தளபதியாக எடுத்தார். அவருடைய கணவர் பழைய கதைகளையே படமாக்கும்போது, என்னை விமர்சனம் செய்வதற்கு சுஹாசினிக்கு தகுதியில்லை.
ஏசி ரூமில் இருந்து கொண்டு என் படத்தை கடுமையாக தாக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த சினிமாவை அவர் சாடியிருக்கிறார். தமிழக மக்கள் எல்லோரையும் முட்டாள் என கூறியிருக்கிறார்.
இது என் மனதை மிகவும் நோகடித்துவிட்டது. அவரை சும்மாவிட மாட்டேன். சுஹாசினி மீது வழக்குத் தொடர்வேன். தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், டைரக்டர் சங்கத்திலும் சுஹாசினி மீது புகார் தருவேன் என்றார்.