நம்பியார்-நாகேஷுக்கு மலரஞ்சலி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. சங்க தலைவர் ராம நாராயணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மறைந்த நடிகர்கள் நம்பியார், நாகேஷ் ஆகியோருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் அடுத்த வாரம் மலரஞ்சலி செலுத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் வரும் 22-ம் தேதி நடக்கும் பொதுக் குழுவில் திரையுலக வளர்ச்சிக்காக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன், நடிகர் நாகேஷ், பட அதிபர் ஆர்.மகாலட்சுமி, இலங்கை பிரச்னைக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமார் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications











