Don't Miss!
- News பூமியின் ராட்சத பாம்பு இதுதான்.. 50 அடி நீள ‛வாசுகி’.. குஜராத்தில் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
நம் பணத்தில் நம் இனத்தை அழிப்பதா? - தங்கர் ஆவேசம்
வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் அங்காடித் தெரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடந்தது.
விழாவில் இயக்குநர்கள் பாலு மகேந்திரா, அமீர், சசிகுமார், பாலாஜி சக்தி வேல், சுந்தர் சி, பசங்க பாண்டிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாடல் வெளியீட்டுக்குப் பின் இயக்குநர் தங்கர் பச்சான் பேசியதாவது:
நாமெல்லாம் திரைக்கலைஞர்கள். கோடிக் கணக்கில் பணம் கொடுத்து நம்மை வாழவைத்த தமிழ் உறவுகள் இன்று கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்கள்.
நம்மிடம் வரியாகவும், நன்கொடையாகவும், போர் வீரர் நிதியாகவும் பெற்ற பணத்தில் தயாரித்த ஆயுதங்களை நமது மக்கள் மீதே பிரயோகிக்கிறது இந்திய அரசு. மனது சொல்ல முடியாத வேதனையில் தவிக்கிறது. சினிமாவில் 24 சங்கங்கள் இருந்தும் பலனில்லை. ஒன்றும் பண்ண முடியாமல் கிடக்கிறோம்.
6-ந்தேதி சோனியா தமிழகம் வருகிறார். நாம் கேள்வி எழுப்ப வேண்டும். இனி மவுனமாக இருந்து பயனில்லை. நமது எதிர்ப்புதான் இந்த இனத்தை அடையாளம் காட்டும், என்றார்.
பாலு மகேந்திரா, அமீர் உள்ளிட்டோரும் பேசினார்கள்.
தயாரிப்பாளர்கள் அருண்பாண்டியன், கருணாமூர்த்தி நன்றி கூறினர். படத்தின் நாயகன் மகேஷ், நாயகி அஞ்சலி ஆகியோரும் வந்திருந்தனர்.