Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'டூயட் எனும் பெயரில் குரங்காட்டம்!'-பாலுமகேந்திரா
வசந்தபாலன் இயக்கும் அங்காடித் தெரு படத்தின் ஆடியோவை நேற்று வெளியிட்ட பாலு மகேந்திரா, பேசியதாவது:
தமிழ் சினிமாவில் இன்றைக்கு மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது உண்மைதான். ஆனால் முழு மாற்றம் வரவில்லை.
தமிழ் படங்களில் காதல் பாடல் என்ற வழக்கம் தொன்று தொட்டு இருக்கிறது. அது எரிச்சலூட்டக்கூடிய விஷயம். டி.வியில் இதுபோல் பாடல்கள் வரும்போது ஒலியை குறைத்துவிட்டு பாருங்கள்... போதை ஏறிய இரண்டு குரங்கு குட்டிகள் ஆடுவதுபோலத்தான் தோன்றும். அதை மாற்றியே ஆக வேண்டும் என்று நினைத்தேன்.
அதற்காகத்தான் முள்ளும் மலரும் படத்தில், பின்னணியில் பாடல் காட்சியை படமாக்க மகேந்திரனிடம் கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். காதல் வயப்பட்டவர்கள் வழக்கமாக என்ன செய்வார்களோ அது இருந்தால் மட்டுமே போதும்.
என் படங்களில் காதல் இருக்கும். மற்றபடி முடிந்தவரை அபத்தங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டேன்.
சினிமாவை பொருத்தவரை கதாநாயகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். நாயகி என்றால் பட்டர் கேக் மாதிரி வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. அது தவறு. பஸ் ஸ்டாப்பில் பார்க்கும் முகங்கள், அடுத்த வீட்டில் பார்க்கும் முகங்களையும் திரையில் பார்க்க வேண்டும்.
சினிமா மாறிக்கொண்டிருக்கிறது. ஸ்டார் இமேஜ் உடைந்து கொண்டிருக்கிறது. நல்ல சினிமா வரவேண்டுமென்றால் ஸ்டார் இமேஜ் உடைய வேண்டும், உடைக்கப்படும், என்றார் பாலு மகேந்திரா.