Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வரலாற்றைத் திரித்துக் கூறும் பழஸி ராஜா - தமிழகத்தில் எதிர்ப்பு
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில் வரலாற்றைத் திரித்து இந்த கதை அமைக்கப்பட்டுள்ளதால் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
1857ம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகம் நடந்தது. அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து ராஜ்ஜியத்தை எதிர்த்து போர்க்குரல் கொடுத்தவர் பழசிராஜா. இதுதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் முழக்கம் என்பதாகச் சித்தரித்துள்ளனாராம் கதையில்.
ஆனால் உண்மையில் முதல் சுதந்திரப் போராட்டக் குரல் எழுந்தது தமிழகத்தில்தான், அதுவும் தெண்பாண்டி நாட்டில்தான் என்பது வரலாறு. அதற்கு சரித்திர ஆதாரங்கள் பல உள்ளன.
பழஸிராஜாவின் காலத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் தமிழகத்திலிருந்து முதலில் பூலித்தேவன் பின்னர், மருது பாண்டிய சகோதரர்கள் என்ற உண்மையைத் திரிக்கும் விதமாக இந்தப் படத்தை எடுத்திருப்பதால், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பழஸிராஜா கேரக்டரில் மம்மூட்டி நடித்துள்ளார். எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை அமைத்துள்ளார்.
இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளதால், படம் தமிழகத்தில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.