Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வரலாற்றைத் திரித்துக் கூறும் பழஸி ராஜா - தமிழகத்தில் எதிர்ப்பு
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில் வரலாற்றைத் திரித்து இந்த கதை அமைக்கப்பட்டுள்ளதால் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
1857ம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகம் நடந்தது. அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து ராஜ்ஜியத்தை எதிர்த்து போர்க்குரல் கொடுத்தவர் பழசிராஜா. இதுதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் முழக்கம் என்பதாகச் சித்தரித்துள்ளனாராம் கதையில்.
ஆனால் உண்மையில் முதல் சுதந்திரப் போராட்டக் குரல் எழுந்தது தமிழகத்தில்தான், அதுவும் தெண்பாண்டி நாட்டில்தான் என்பது வரலாறு. அதற்கு சரித்திர ஆதாரங்கள் பல உள்ளன.
பழஸிராஜாவின் காலத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் தமிழகத்திலிருந்து முதலில் பூலித்தேவன் பின்னர், மருது பாண்டிய சகோதரர்கள் என்ற உண்மையைத் திரிக்கும் விதமாக இந்தப் படத்தை எடுத்திருப்பதால், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பழஸிராஜா கேரக்டரில் மம்மூட்டி நடித்துள்ளார். எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை அமைத்துள்ளார்.
இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளதால், படம் தமிழகத்தில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.