பாத்திமா பேகம் ஆனார் ராஜஸ்ரீ

கருத்தம்மா படத்தில் அறிமுகமானவர் ராஜஸ்ரீ. மாதவி என்ற இயற்பெயர் கொண்ட இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். நந்தா படத்தில் சூர்யாவின் அம்மா வேடத்தில், வசனம் பேசாமல் அசத்தலாக நடித்தார்.
திரைப்படங்கள் குறைந்த நிலையில் டிவி தொடர்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் தான் நீண்ட காலமாக காதலித்து வந்த அன்சாரி ராஜா என்பவரை திடீரென கல்யாணம் செய்து கொண்டார்.
இதனால் ராஜஸ்ரீயின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இப்போது வீட்டை விட்டுக் கூட வெளியே வராமல் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். ராஜஸ்ரீயின் இந்த திடீர் கல்யாணத்தால், அவரது ஒரே தங்கைக்கு வந்த வரன் ரத்தாகி விட்டதாம்.
இந்த நிலையில், ராஜஸ்ரீ தனது மதத்தை மாற்றிக் கொண்டு, இஸ்லாமுக்கு மாறி விட்டாராம். தனது பெயரையும் பாத்திமா பேகம் எனவும் மாற்றி விட்டாராம்.
இனிமேல் டிவி தொடர்கள், சினிமா என எதிலும் நடிக்கப் போவதில்லையாம். முற்றிலும் இல்லத்தரசியாக மாறி விட்டாராம்.


Click it and Unblock the Notifications











