Don't Miss!
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Lifestyle பளபளப்பான முகத்திற்கு தயிர்-எலுமிச்சை ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- News நாளை முதல் கட்ட லோக்சபா தேர்தல்:102 தொகுதிகளில் 2019-ல் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவு? முழு விவரம்!
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வேலைநீக்கம்-சல்மா ஹயேக் கணவர் சிறைபிடிப்பு
பினால்ட் பிரான்ஸின் முன்னணி தொழிலதிபர் ஆவார். சமீபத்தில் தனது இரு நிறுவனங்களைச் சேர்ந்த 1200 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கினார். பொருளாதார நெருக்கடி நிலையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அவர் எடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர்களில் 50 பேர் கடந்த வாரம் பாரீஸில் நடந்த நிறுவன கூட்டத்தில் பங்கேற்க வந்த பினால்ட்டை அவரது காருக்குள் வைத்து சிறை பிடித்தனர்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கலவரத் தடுப்புப் போலீஸார் விரைந்து வந்து பினால்ட்டை மீட்டனர்.
46 வயதாகும் கோடீஸ்வரரான பினால்ட்டுக்கு, கிறிஸ்டி ஏல நிலையம், குச்சி, கன்வர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபல நிறுவனங்களில் பங்கு உள்ளது.
சல்மா ஹயேக்கை கடந்த மாதம்தான் கல்யாணம் செய்து கொண்டார் பினால்ட். அவரது முதல் மனைவியின் பெயர் பிரீதா ஸ்டார். இவர் மூலம் பினால்ட்டுக்கு வாலன்டினா என்ற மகள் உள்ளார்.