Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வேலைநீக்கம்-சல்மா ஹயேக் கணவர் சிறைபிடிப்பு
பினால்ட் பிரான்ஸின் முன்னணி தொழிலதிபர் ஆவார். சமீபத்தில் தனது இரு நிறுவனங்களைச் சேர்ந்த 1200 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கினார். பொருளாதார நெருக்கடி நிலையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அவர் எடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர்களில் 50 பேர் கடந்த வாரம் பாரீஸில் நடந்த நிறுவன கூட்டத்தில் பங்கேற்க வந்த பினால்ட்டை அவரது காருக்குள் வைத்து சிறை பிடித்தனர்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கலவரத் தடுப்புப் போலீஸார் விரைந்து வந்து பினால்ட்டை மீட்டனர்.
46 வயதாகும் கோடீஸ்வரரான பினால்ட்டுக்கு, கிறிஸ்டி ஏல நிலையம், குச்சி, கன்வர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபல நிறுவனங்களில் பங்கு உள்ளது.
சல்மா ஹயேக்கை கடந்த மாதம்தான் கல்யாணம் செய்து கொண்டார் பினால்ட். அவரது முதல் மனைவியின் பெயர் பிரீதா ஸ்டார். இவர் மூலம் பினால்ட்டுக்கு வாலன்டினா என்ற மகள் உள்ளார்.