Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நயனிடம் சிம்பு 'இம்ப்ரஸ்' முயற்சி!
காதல் முறிந்து, வார்த்தைப் போரும் வலுத்து, ஒரு வழியாக எல்லாம் ஓய்ந்து, ரசிகர்களும் கிட்டத்தட்ட மறந்து போன விஷயம் சிம்பு - நயனதாரா காதல்.
ஆனால் சிம்புவால் மட்டும் இன்னும் நயனதாராவை மறக்க முடியவில்லை போலும். இன்று சென்னையில் நடந்த திரையுலகினரின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரதிபலித்தது.
எப்படியும் நயனதாரா வந்துதானே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருந்தாரோ என்னவோ, சிம்புவின் பார்வையில் ஒரு அலை காணப்பட்டது. நயனதாரா வந்தபோது அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்ற சிம்பு, நயனதாரா அருகில் இருந்த சீட்டில் டக்கென்று உட்கார்ந்து கொண்டார்.
நயனதாராவின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் நயனதாரா அந்தப் பக்கமே திரும்பவில்லை. மேலும் அருகில் இருந்த பிற கலைஞர்களுடன் பேசத் தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் திரிஷாவுடன் ஜாலியாக பேசத் தொடங்கினார். இம்ப்ரஸ் செய்ய எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் சற்றே வருத்தம் அடைந்த சிம்பு, ஏமாற்றத்துடன் எழுந்து கர்நாடகம் தண்ணீர் கொடுக்காதது தவறு என்று மைக்கைப் பிடித்து பேச ஆரம்பித்தார்.