வடிவேலு மேனேஜர் தற்கொலை
நடிகர் வடிவேலுவின் நண்பரும், அவரது மேனேஜருமான வேலுச்சாமி இன்று தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. 47 வயதாகும் இவர் வடிவேலுவின் நெருங்கிய நண்பர். அவரிடம் மேனேஜராக இருந்து வந்தார். கார் டிரைவராகவும் இருந்தார்.
வடிவேலுவின் கால்ஷீட்களை இவர்தான் கவனித்து வந்தார்.
வடபழனியில் தனியாக வசித்து வந்தார் வேலுச்சாமி. இந்த நிலையில் இன்று காலை தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் தெரியவில்லை.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீஸார் வேலுச்சாமியின் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர்.
வேலுச்சாமியின் மரணச் செய்தி அறிந்து விரைந்து வந்த வடிவேலு, அவரது உடலைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.


Click it and Unblock the Notifications











