Don't Miss!
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- News வெய்யிலே வெய்யிலே.. இன்று தமிழகமெல்லாம் "வீசுது வெப்ப அலை".. பொதுசுகாதார துறையின் அதிரடியை பாருங்க
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முதல் கணவரோடு மீண்டும் சேர்ந்தார் வனிதா விஜயகுமார்!
மாணி்க்கம் படத்தில் ராஜ்கிரண் ஜோடியாகவும், சந்திரலேகா படத்தில் விஜய் ஜோடியாகவும் நடித்தவர் வனிதா.
நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் இரண்டாவது மகள். வனிதாவும் டி.வி. நடிகர் ஆகாஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். பின்னர் ஆனந்தராஜ் என்பவரை வனிதா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மகன் விஜய் ஸ்ரீஹரி, தந்தை ஆகாஷுடன் வசித்தார். மகனை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா வற்புறுத்தினார். ஆகாஷ் மறுத்துவிட்டார். விஜயகுமாரும் இதில் ஆகாஷ் பக்கமே நின்றார். விஜயகுமார் தாக்கப்பட்டார். ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார். வனிதா போலீஸ், கோர்ட்டு என்று சென்றார்.
நீதிமன்றத்தில் தீர்ப்பு வனிதாவுக்கு சாதகமாக வந்தது. விஜயஸ்ரீஹரி வனிதாவுடன் வசிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் அந்த சிறுவன் வனிதாவுடன் செல்ல மறுத்துவிட்டான்.
இதனால் வனிதாவும் ஆகாஷும் கடுமையாக மோதிக் கொண்டனர். தினசரி பத்திரிகையைத் திறந்தாலே இவர்கள் செய்திதான் எனும் அளவுக்கு நிலைமை போனது. காவல் நிலையத்தை முற்றுகையிடுவது, ஆகாஷ் வீட்டு முன்பு உண்ணாவிரதம் என வனிதா செய்த பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.
ஆனால் எவ்வளவு போராடியும் மகன் விஜய் ஸ்ரீஹரியை தன்னுடன் அழைத்துச் செல்ல முடியாத நிலையில், வனிதா தன் இரண்டாவது கணவரை பிரிவு முடிவு செய்து அறிவித்தார். மகனுக்காக இந்த முடிவு என்றும் அவர் கூறினார்.
ராஜனைப் பிரிந்ததோடு, முதல் கணவர் ஆகாஷுடன் மீண்டும் சேர்ந்து வாழவும் விருப்பம் தெரிவித்தார்.
அதன்படி ஆகாஷும் வனிதாவும் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். பொதுநிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்கிறார்கள். புத்தாண்டை ஓட்டலில் ஒன்றாக கொண்டாடினார்கள். அப்போது போட்டோவுக்கு சேர்ந்து போஸ் கொடுத்தனர்.
கடந்த ஆண்டில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரத்தில், ஒரு சின்ன பையனின் பிடிவாதம், உறவுகளையே மாற்றிப்போட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!