Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
முதல் கணவரோடு மீண்டும் சேர்ந்தார் வனிதா விஜயகுமார்!
மாணி்க்கம் படத்தில் ராஜ்கிரண் ஜோடியாகவும், சந்திரலேகா படத்தில் விஜய் ஜோடியாகவும் நடித்தவர் வனிதா.
நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் இரண்டாவது மகள். வனிதாவும் டி.வி. நடிகர் ஆகாஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். பின்னர் ஆனந்தராஜ் என்பவரை வனிதா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மகன் விஜய் ஸ்ரீஹரி, தந்தை ஆகாஷுடன் வசித்தார். மகனை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா வற்புறுத்தினார். ஆகாஷ் மறுத்துவிட்டார். விஜயகுமாரும் இதில் ஆகாஷ் பக்கமே நின்றார். விஜயகுமார் தாக்கப்பட்டார். ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார். வனிதா போலீஸ், கோர்ட்டு என்று சென்றார்.
நீதிமன்றத்தில் தீர்ப்பு வனிதாவுக்கு சாதகமாக வந்தது. விஜயஸ்ரீஹரி வனிதாவுடன் வசிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் அந்த சிறுவன் வனிதாவுடன் செல்ல மறுத்துவிட்டான்.
இதனால் வனிதாவும் ஆகாஷும் கடுமையாக மோதிக் கொண்டனர். தினசரி பத்திரிகையைத் திறந்தாலே இவர்கள் செய்திதான் எனும் அளவுக்கு நிலைமை போனது. காவல் நிலையத்தை முற்றுகையிடுவது, ஆகாஷ் வீட்டு முன்பு உண்ணாவிரதம் என வனிதா செய்த பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.
ஆனால் எவ்வளவு போராடியும் மகன் விஜய் ஸ்ரீஹரியை தன்னுடன் அழைத்துச் செல்ல முடியாத நிலையில், வனிதா தன் இரண்டாவது கணவரை பிரிவு முடிவு செய்து அறிவித்தார். மகனுக்காக இந்த முடிவு என்றும் அவர் கூறினார்.
ராஜனைப் பிரிந்ததோடு, முதல் கணவர் ஆகாஷுடன் மீண்டும் சேர்ந்து வாழவும் விருப்பம் தெரிவித்தார்.
அதன்படி ஆகாஷும் வனிதாவும் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். பொதுநிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்கிறார்கள். புத்தாண்டை ஓட்டலில் ஒன்றாக கொண்டாடினார்கள். அப்போது போட்டோவுக்கு சேர்ந்து போஸ் கொடுத்தனர்.
கடந்த ஆண்டில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரத்தில், ஒரு சின்ன பையனின் பிடிவாதம், உறவுகளையே மாற்றிப்போட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.