ஒரே படத்தில் ரெண்டு 'கா'
ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் நடிக்கும் படங்கள் இப்போது நிறைய வர ஆரம்பித்து விட்டது. அந்த வரிசையில் யார் என்ற புதிய படம் 2 நாயகிகளுடன் வரவுள்ளது.
யார் என்று பல ஆண்டுகளுக்கு ஒரு தமிழ்ப் படம் வந்தது. இப்போது அதே பெயரில் புதிய படம் உருவாகிறது. முதலில் இதற்கு அஞ்சுகம் என்றுதான் வைத்திருந்தார்கள். பின்னர் என்ன யோசித்தார்களோ, அதை மாற்றி விட்டு யார் என்றுசூட்டி விட்டனர்.
இதில் முக்கிய நாயகியாக சினேகாவும், இன்னொரு நாயகியாக பூமிகாவும் நடிக்கின்றனர். இருவருக்கும் முக்கியமான பாத்திரங்களாம். இதனால் இமேஜ் பிரச்சினை வராது என்கிறார் இயக்குநர் ஜெயராம்.
அதற்கேற்றார் போல இரு நடிகைகளும் கா விடாமல் சமர்த்தாக நடித்துக் கொடுத்தார்களாம். அதுபோக நன்றாக பழகி தோழிகளாகி விட்டனராம்.
படத்தின் தயாரிப்பாளர் சதீஷ். இவர் வேறு யாருமல்ல, நடிகை ஷ்ரியாவின் மேனேஜர். இப்போது படத் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
அடுத்து ஷ்ரியாவை வைத்து படம் எடுப்பாரா சதீஷ்.


Click it and Unblock the Notifications











