Don't Miss!
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஒரே படத்தில் ரெண்டு 'கா'
ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் நடிக்கும் படங்கள் இப்போது நிறைய வர ஆரம்பித்து விட்டது. அந்த வரிசையில் யார் என்ற புதிய படம் 2 நாயகிகளுடன் வரவுள்ளது.
யார் என்று பல ஆண்டுகளுக்கு ஒரு தமிழ்ப் படம் வந்தது. இப்போது அதே பெயரில் புதிய படம் உருவாகிறது. முதலில் இதற்கு அஞ்சுகம் என்றுதான் வைத்திருந்தார்கள். பின்னர் என்ன யோசித்தார்களோ, அதை மாற்றி விட்டு யார் என்றுசூட்டி விட்டனர்.
இதில் முக்கிய நாயகியாக சினேகாவும், இன்னொரு நாயகியாக பூமிகாவும் நடிக்கின்றனர். இருவருக்கும் முக்கியமான பாத்திரங்களாம். இதனால் இமேஜ் பிரச்சினை வராது என்கிறார் இயக்குநர் ஜெயராம்.
அதற்கேற்றார் போல இரு நடிகைகளும் கா விடாமல் சமர்த்தாக நடித்துக் கொடுத்தார்களாம். அதுபோக நன்றாக பழகி தோழிகளாகி விட்டனராம்.
படத்தின் தயாரிப்பாளர் சதீஷ். இவர் வேறு யாருமல்ல, நடிகை ஷ்ரியாவின் மேனேஜர். இப்போது படத் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
அடுத்து ஷ்ரியாவை வைத்து படம் எடுப்பாரா சதீஷ்.