Don't Miss!
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- News வெய்யிலே வெய்யிலே.. இன்று தமிழகமெல்லாம் "வீசுது வெப்ப அலை".. பொதுசுகாதார துறையின் அதிரடியை பாருங்க
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டி.எம்.எஸ்சுக்கு அழகிரியின் பாராட்டு விழா-கருணாநிதி பங்கேற்பு
மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனுக்கு மதுரை புதுநத்தம் சாலையில் சந்திப்பில் (பாண்டியன் ஓட்டல் பின்புறம்) முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை சிறப்பு விழா நாளை காலையில் நடைபெறுகிறது.
மாலை தமுக்கம் மைதானத்தில் சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சௌந்திரராஜனுக்கு பாராட்டு விழா நடக்கிறது. இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மு.க.அழகிரி செய்துள்ளார்.
இந்த இரு விழாக்களிலும் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி இன்று மாலை தூத்துக்குடியி்ல் இருந்து மதுரை வருகிறார். அவருக்கு மதுரை தி.மு.கவினர் சிறப்பான வரவேற்பு கொடுக்கிறார்கள்.
வரவேற்று நிகழ்ச்சிக்குப் பின்னர் காலையில் நடைபெறும் விழாவில் மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் சிலையை திறந்து வைத்துப் பேசுகிறார்.
மாலையில் டி.எம்.சௌந்திரராஜனுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு பேசுகிறார். இந்த விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன் முன்னிலை வகிக்கிறார்.
மு.க.அழகிரி அனைவரையும் வரவேற்றுப் பேசுகிறார். விழாவில் இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, பாடலாசிரியர்கள் வாலி, வைரமுத்து, இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விசுவாதன், ராமமூர்த்தி, பின்னணி பாடகி பி.சுசிலா ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.
டி.எம்.சௌந்திரராஜன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
மதுரையில் பலத்த பாதுகாப்பு:
இதற்கிடையே முதல்வரின் வருகையையொட்டி மதுரையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பல தீவிரவாதிகள் பிடிபட்டுள்ள நிலையில் முதல்வர் தூத்துக்குடி, மதுரையில் பயணம் மேற்கொண்டுள்ளதால் சுமார் 3,000 போலீசார் அவரது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் விழாவில் இன்று அவர் பங்கேற்கிறார்.
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!