Don't Miss!
- News ரிமோட்டை எறிஞ்சு டிவியை உடைச்சு..சில்லறைய சிதற விட்டேனே! இப்போ..மநீமவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி
- Automobiles இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
தாயம்... ஒரு நவீன மகாபாரதம்!
ராஜேஷ், வடிவுக்கரசி, சுதாசந்திரன், காவேரி, அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தத் தொடருக்கு 'அன்னக்கிளி' ஆர்.செல்வராஜ் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். விஜயகாந்த் நடித்த "சக்கரைதேவன்' படத்தை இயக்கிய ஜே.பன்னீர் தொடரை இயக்குகிறார்.
150 படங்களுக்கும் மேல் கதை திரைக்கதை எழுதிய முன்னணி திரை எழுத்தாளரான ஆர் செல்வராஜ் தாயம் பற்றி இப்படிச் சொல்கிறார்...
"போரில் தோல்வியடைந்து அழிந்து போனவர்களை விட வெற்றி பெற்று வாழ்பவர்கள்தான் அதிகம் வேதனையடைவார்கள் என்று புத்தர் கூறிய வார்த்தைகளைக் கதைக் கருவாகக் கொண்டு இந்தத் தொடரை உருவாக்குகிறோம். அதற்காக மகாபாரதத்தின் கடைசிப் பகுதியை எடுத்துக்கொண்டு அதை நம் காலத்து நிகழ்வாகக் கூறியுள்ளோம்.
பகைவனைக் கொல்வதன் மூலம் பகையைக் கொல்ல முடியாது; பகையின் ஆயுள் ஒவ்வொரு மரணத்திற்கு பிறகும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதுதான் 'தாயம்' தொடர் உருவான பின்னணி.
நாட்டுப்புறங்களில் பாடப்படும் திரௌபதி அம்மன் கதைப் பாடல், தருமராசன் பெரிய எழுத்துக் கதை, அல்லி ராணி, பாவை கூத்து, ஒயிலாட்டம், ஒப்பாரி பாடல்களிலிருந்து கதைக்கான சம்பவங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். 'தாயம்' -அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் விறுவிறுப்பான, வெற்றிகரமான தொடராக அமையும்" என்றார் ஆர்.செல்வராஜ்.
பெரிய திரையிலிருந்து ஒரேயடியாக சின்னத் திரைக்கு வந்துவிட்டது குறித்து கேட்டபோது, "பெரிய திரைக்கான சமரசங்கள் எதுவுமில்லாமல், நிம்மதியாக, நினைத்த கோணத்தில் கதை எழுத முடிகிறது, இதுபோதும்" என்கிறார் செல்வராஜ்.
அக்டோபர் 12-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்தத் தொடருக்கு இசை -ராஜேஷ் வைத்யா. ஒளிப்பதிவு -ஜி.கனகராஜ். தயாரிப்பு -சூரியராஜ் குமார்.