Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கண் கலங்கிய சரத்-ராதிகா!
சரத்-ஷ்ரேயா நடிப்பில் உருவான இந்தப் படம் ரிலீசுக்கு முன்பே வெளியாகிவிட்டது.
இது குறித்துப் பேசிய படத்தின் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்,
இதற்கு முன்னர் ஒரு படத்தின் ஒரு பாடல் காட்சி அல்லது ஒரு சண்டைக் காட்சி இன்டர்நெட்டில் வெளியானது உண்டு. ஆனால் இப்போது முழு படமும் இன்டர்நெட்டில் வெளியாகியிருக்கிறது. இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. படம் இன்னமும் முழுவதுமாக உருவாக்கப்படவில்லை. எடிட்டிங் கூட முழுதாக நடக்கவில்லை.
இது ஒரு கொலை மாதிரி தான். இதன் மூலம் ஒரு வருட உழைப்பு எல்லாம் வீணாகி விட்டது. இந்த சம்பவம் பற்றி எல்லோரும் விசாரிக்கும் போது ஏதோ இழவு வீடு போல தோன்றுகிறது என்ற அவர் தொடர்ந்து பேச முடியாமல் அமர்ந்துவிட்டார்.
இதையடுத்து பேச வந்த ராதிகா மைக்கை வாங்கினார். ஆனால், பேச முடியாமல் கண் கலங்கி தவித்ததால் அவரிடமிருந்து சரத்குமார் மைக்கை வாங்கி கண் கலங்கியபடி பேசினார்.
அவர் கூறுகையில், இந்தப் பிரச்சனை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதி மற்றும் விரைந்து செயல்பட்ட சைபர் கிரைம் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்தப் படத்தில் ரூ. 15 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. பணத்தைக் கூட விடுங்கள். நானும் ராதிகாவும் இன்னும் கடினமாக உழைத்து சம்பாதித்து விடுவோம். ஆனால் எங்களுடைய உழைப்பே திருடப்பட்டுவிட்டதைத் தான் தாங்க முடியவில்லை.
இந்த நஷ்டத்தை நானும், ராதிகாவும் உழைத்து ஈடு செய்ய முடியும். தயாரிப்பாளர்கள் நிலைமைதான் கவலைக்குரியதாக உள்ளது. எபெக்ட், எடிட்டிங், ரீ ரிக்கார்டிங் என நிறைய இடங்களுக்கு படத்தின் காப்பி போகிறது. அப்படி ஏதோ ஒரு இடத்தில் தான் படம் வெளியே போயுள்ளது.
திருட்டு விசிடிகள் வந்திருப்பது முழுமையான படம் அல்ல, ஜக்குபாயை முழுமையாக வெளியிடுவோம். அந்த படத்தை எல்லோரும் திரையில் பார்த்து ஆதரிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் கலையுலகை அழித்து விடாதீர்கள் என்றார்.
ஒருவழியாக தன் கவலையை மறைத்துக் கொண்டு பேசிய ராதிகா, ஒரு வருட உழைப்பை ஒரே நாளில் பாழடித்து விட்டனர். இப்படி சிடியில் படத்தை வெளியிட்டதை விட எங்களை நடுரோட்டில் வைத்து சுட்டு கொன்றிருக்கலாம் என்று கூறிவிட்டு மீண்டும் கண் கலங்கிவிட்டார்.