Don't Miss!
- News மருதாணி இலை.. கையில் ஹென்னா போட்டிருந்தால், ஓட்டுப்போட முடியாதா? சென்னை, திருவள்ளூரில் திடீர் பரபர
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தனியார் விருந்துகளில் ஆட கரீனா, பிரியங்கா மறுப்பு
தனியார் ஏற்பாடு செய்யும் விருந்து நிகழ்ச்சிகளில் ஆட மறுக்கிறார்களாம் நடிகைகள் கரீனா கபூரும், பிரியங்கா சோப்ராவும். இதேபோல கரீனாவின் காதலரான சைஃப் அலிகானும் ஆட மறுத்து விடுகிறாராம்.
சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ஆட வருமாறு கரீனாவையும், சைஃபையும் கூப்பிட்டிருந்தனர். ஆனால் இருவரும் மறுத்து விட்டனராம். அதேபோல ஐந்து நட்சத்திர ஹோட்டலின் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஆட வருமாறு பிரியங்கா சோப்ராவைக் கூப்பிட்டுள்ளனர். இதற்காக ரூ. 3 கோடிவரை தருவதாக கூறியும் கூட அதை நிராகரித்து விட்டாராம் பிரியங்கா சோப்ரா.
தனியார் நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் முன்பு நேரடியாக ஆடுவதை பிரியங்கா சோப்ரா விரும்பவில்லையாம். எவ்வளவு பணம் கொடுத்தாலும் இதுபோன்ற வாய்ப்புகள் தேவை இல்லை என்கிறாராம் பிரியங்கா. அவர் தற்போது ஒரு படத்திற்கு ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், மல்லிகா ஷெராவத், பிபாஷா பாசு ஆகியோர் இதுபோன்ற டான்ஸுகளுக்கு பெரும்பாலும் நோ சொல்வதில்லையாம்.