10 இயக்குநர்கள் நடிக்கும் 'மாயாண்டி குடும்பத்தார்'!

பாண்டி படத்தை இயக்கிய ராசு மதுரவன் இந்தப் படத்தை இயக்குகிறார். திமிரு, காளை பட இயக்குநர் தருண் கோபிதான் இந்தப் படத்தின் நாயகன்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த புதுமுகம் அஞ்சுஷா இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கிறார்.
சபேஷ் முரலி இசையமாக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னை ஏவிஎம்மில் தொடங்கியது. மாலையில் நிருபர்களைச் சந்தித்த படத்தின் இயக்குநர் ராசு மதுரவன், இந்தப் படம் ஒரு நிஜக் கதையின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது என்றார்.
ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் பாசக் கதை இது. ஆனால் ஆக்ஷன், செண்டிமெண்ட் என சகலமும் உள்ள ஜனரஞ்சகப் படம் இது என்றார்.


Click it and Unblock the Notifications











