Don't Miss!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கிரண் படத்தை ரிலீஸ் செய்ய ஆந்திர உயர்நீதிமன்றம் தடை
ஹைஸ்கூல் என்ற தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார் கிரண். இதில் பள்ளிக்கூட ஆசிரியை வேடத்தில் நடித்துள்ளார். தன்னிடம் படிக்கும் 13 வயது மாணவன் மனதில் செக்ஸ் ஆசையைப் புகுத்தி, அவனுடன் உறவு கொள்ளத் துடிக்கும் ஆசிரியை போல இதில் நடித்துள்ளாராம் கிரண்.
காம வெறியைத் தூண்டும் வகையில் பல காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளனவாம். படு ஆபாசமாகவும், கவர்ச்சிகரமாகவும் கிரண் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்தப் படத்தை வெளியிட பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தன. இந்த நிலையில், வாரங்கல்லை சேர்ந்த சமூக சேவகர் சக்ரபாணி என்பவர் ஆந்திர உயர்நீதமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ஆசிரியை வேடத்தில் தோன்றும் நடிகை கிரண் மாணவனை காதலிப்பது போல் ஹைஸ்கூல் படத்தில் காட்சி உள்ளது. இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது.
இப்படத்தை பார்ப்பவர்கள் தவறான வழிக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஹைஸ்கூல் படத்தை மார்ச் 9ம் தேதி வரை தியேட்டர்களில் வெளியிட இடைக்கால தடை விதித்தனர்.