Don't Miss!
- News மருதாணி இலை.. கையில் ஹென்னா போட்டிருந்தால், ஓட்டுப்போட முடியாதா? சென்னை, திருவள்ளூரில் திடீர் பரபர
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/7!
நாயகன், நாயகி உள்பட பெரும்பாலான பாத்திரங்களில் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்துக்கு வழக்கு எண் 18/7 என வித்தியாசமாகப் பெயர் சூட்டியுள்ளார் பாலாஜி சக்திவேல்.
முதல் இரு படங்களையும் தன் குரு இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸுக்காகத் தந்தவர், இந்த முறை தனது நண்பர் லிங்குசாமியின் சொந்தப் பட நிறுவனத்துக்காக எடுக்கிறார்.
இந்தப் படத்தின் கதை மனதை உலுக்கும் ஒரு நிஜ வழக்கு ஒன்றின் அடிப்படையில் உருவாகிறதாம். அது என்ன சம்பவம் என்பதை மட்டும் சொல்ல மறுத்துவிட்டார் பாலாஜி சக்திவேல்.
முழுக்க முழுக்க புதுமுகங்களையே இந்தப் படத்திலும் பயன்படுத்தும் நோக்கம் என்ன?
விசேஷமாக ஒன்றுமில்லை. சில கதைகளுக்கு எந்த பிம்பமும் படியாத புதிய முகங்கள் இருந்தால் அதிக நம்பகத்தன்மையும், பிரஷ்னெஸும் கிடைக்கும். அதற்காகத்தான். இன்னொன்று கதையின் தன்மைக்கேற்ப அவர்களை மாற்றிவிடலாம்.
இந்தக் கதை நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தைத் தரும் ரசிகர்களுக்கு, என்கிறார் பாலாஜி.
கதைக்குப் பொருத்தமான முகங்களுக்கான தேடுதலை தீவிரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாம்.
ரொம்ப 'வாய்தா' வாங்காமல் சீக்கிரமாக 'வழக்கை' முடிங்க பாலாஜி!