twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புவனேஸ்வரி.. கவலையில் பாரதிராஜா!

    |

    Bharathiraja
    தெக்கித்திப் பொண்ணு சீரியலில் நடித்து வந்த புவனேஸ்வரி விபச்சார வழக்கில் சிக்கி சிறைக்குப் போய் விட்டதால் அந்த கேரக்டரில் தொடர்ந்து புவனேஸ்வரி நடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் கவலையி்ல் ஆழ்ந்துள்ளார் தொடரின் இயக்குநரான பாரதிராஜா.

    கலைஞர் டிவியில் பாரதிராஜாவின் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் வெற்றித் தொடர் தெக்கித்திப் பொண்ணு. இந்தத் தொடரின் நாயகியாக முதலில் ரஞ்சிதா நடித்திருந்தார். ஆனால் பின்னர் அவர் விலகிக் கொள்ளவே புவனேஸ்வரியை நடிக்க வைத்தார் பாரதிராஜா.

    இந்தத் தொடர் புவனேஸ்வரிக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இந்த நிலையில் திடீரென விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி புவனேஸ்வரியை போலீஸார் கைது செய்து கொண்டு சென்று விட்டனர்.

    இதனால் தெக்கித்திப் பொண்ணு தொடரில் தொடர்ந்து புவனேஸ்வரி நடிப்பாரா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. பாரதிராஜாவும் இதுதொடர்பாக குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.

    ஒரு வேளை, புவனேஸ்வரி ஜாமீனில் ரிலீஸாகி வந்தாலும் கூட தொடர்ந்து அவரை நடிக்க வைத்தால், தமிழகத் தாய்மார்கள் என்ன நினைப்பார்கள் என்ற குழப்பமும் அவருக்கு ஏற்பட்டுள்ளதாம்.

    இதனால் விரைவில் புவனேஸ்வரி மாற்றப்படக் கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X