Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சுயசரிதை எழுதுகிறார் புவனேஸ்வரி!!
திருநெல்வேலி சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. சொந்தக்காரர் பாண்டியனைத் திருமணம் செய்தார். ஒரு மகன் பிறந்த கையோடு கணவர் பிரிந்து போய்விட, புவனேஸ்வரி தனியாகவே மாடலிங்கில் நுழைந்தார். லோக்கல் மாடலாக இருந்தவருக்கு டிவி சீரியல் மற்றும் பட வாய்ப்புகள் வர அப்படியே பிக்கப் ஆகிவிட்டார்.
பிரியமானவளே, பாய்ஸ் மற்றும் குண்டக்க மண்டக்க படங்களில் அவரது பலான கேரக்டர் பலமாய் பேசப்பட, கடைசியில் நிஜ வாழ்க்கையிலும் அந்தக் கேரக்டராகவே ஒன்றிவிட்டார் போலிருக்கிறது.
2002-ல் முதல்முறை விபச்சார வழக்கில் கைதானார். வழக்கில் ஜெயித்து வெளியில் வந்தவர், இப்போது மீண்டும் அதே விபச்சார வழக்கில் மாட்டிக் கொண்டுள்ளார்.
ஆடம்பர வாழ்க்கை மீதான மோகம் மற்றும் பட வாய்ப்புகள் குறைந்தது போன்றவை அவரை இந்தத் தொழிலையே முழு நேரமாக செய்யும் நிலைக்கு தள்ளிவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் போலீசார் ஏமாற்றி தன்னை இந்த வழக்கில் சிக்க வைத்துவிட்டதாகக் கூறிவருகிறார்.
இந்த நிலையில், ஜாமீனில் வெளியில் வரும் முயற்சிகளில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளார் புவனேஸ்வரி. இன்று அக்டோபர் 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது.
ஜாமீனில் வெளியில் வந்த கையோடு சுயசரிதை எழுதும் முடிவிலிருக்கிறாராம் புவனேஸ்வரி. இதில் தனக்கு நேர்ந்த செக்ஸ் கொடுமைகள், ஏமாற்றங்கள், திரையுலக கசப்புகள், தொழில் போட்டியில் தன்னைக் காட்டிக் கொடுத்த நடிகைகள் என எல்லோரைப் பற்றியும் புட்டுப்புட்டு வைக்கப்போகிறாராம்.
விஷயமறிந்ததும் இதன் பதிப்பக உரிமையை பெற இப்போதே சில புத்தக கம்பெனிகள் போட்டி போடுகின்றன.