Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சுயசரிதை எழுதுகிறார் புவனேஸ்வரி!!
திருநெல்வேலி சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. சொந்தக்காரர் பாண்டியனைத் திருமணம் செய்தார். ஒரு மகன் பிறந்த கையோடு கணவர் பிரிந்து போய்விட, புவனேஸ்வரி தனியாகவே மாடலிங்கில் நுழைந்தார். லோக்கல் மாடலாக இருந்தவருக்கு டிவி சீரியல் மற்றும் பட வாய்ப்புகள் வர அப்படியே பிக்கப் ஆகிவிட்டார்.
பிரியமானவளே, பாய்ஸ் மற்றும் குண்டக்க மண்டக்க படங்களில் அவரது பலான கேரக்டர் பலமாய் பேசப்பட, கடைசியில் நிஜ வாழ்க்கையிலும் அந்தக் கேரக்டராகவே ஒன்றிவிட்டார் போலிருக்கிறது.
2002-ல் முதல்முறை விபச்சார வழக்கில் கைதானார். வழக்கில் ஜெயித்து வெளியில் வந்தவர், இப்போது மீண்டும் அதே விபச்சார வழக்கில் மாட்டிக் கொண்டுள்ளார்.
ஆடம்பர வாழ்க்கை மீதான மோகம் மற்றும் பட வாய்ப்புகள் குறைந்தது போன்றவை அவரை இந்தத் தொழிலையே முழு நேரமாக செய்யும் நிலைக்கு தள்ளிவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் போலீசார் ஏமாற்றி தன்னை இந்த வழக்கில் சிக்க வைத்துவிட்டதாகக் கூறிவருகிறார்.
இந்த நிலையில், ஜாமீனில் வெளியில் வரும் முயற்சிகளில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளார் புவனேஸ்வரி. இன்று அக்டோபர் 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது.
ஜாமீனில் வெளியில் வந்த கையோடு சுயசரிதை எழுதும் முடிவிலிருக்கிறாராம் புவனேஸ்வரி. இதில் தனக்கு நேர்ந்த செக்ஸ் கொடுமைகள், ஏமாற்றங்கள், திரையுலக கசப்புகள், தொழில் போட்டியில் தன்னைக் காட்டிக் கொடுத்த நடிகைகள் என எல்லோரைப் பற்றியும் புட்டுப்புட்டு வைக்கப்போகிறாராம்.
விஷயமறிந்ததும் இதன் பதிப்பக உரிமையை பெற இப்போதே சில புத்தக கம்பெனிகள் போட்டி போடுகின்றன.