Don't Miss!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- News எனக்கே ஸ்கெட்சா? தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தகராறு..தூக்கியடிக்கப்படும் தலைகள்! இவர் தான் காரணமா?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒரே மேடையில் கருணாநிதி, ராமதாஸ், ரஜினி
நல்ல படங்களைக் கொடுப்பது மட்டுமல்லாமல், நல்ல விஷயங்களையும் செய்து அவ்வப்போது அசத்துபவர் தங்கர். அவரது கடுமையான முயற்சியால் ஒரு மிகப் பெரிய செயல் நடக்கப் போகிறது.
அது, ஒரே மேடையில், கருணாநிதியும், ராமதாஸும், ரஜினிகாந்த்தும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.
கருணாநிதிக்கும், ரஜினிக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், ராமதாஸ்- ரஜினி மோதலை தமிழகம் மறந்திருக்காது. பாபா படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் புகுந்து பாமகவினர் செய்த ரகளை, அதனால் ஏற்பட்ட ரஜினி ரசிகர்களின் கொந்தளிப்புகள் என தமிழகமே அப்போது அல்லோகல்லப்பட்டது.
ஆனால் காலப் போக்கில் இந்த மோதல் போக்கு நீர்த்துப் போனது. ரஜினிகாந்த் திரைப்படங்களில் புகை பிடிப்பதை விட வேண்டும் என்று ராமதாஸும், அவரது மகன் மத்திய அமைச்சர் அன்புமணியும் கோரிக்கை விட அதை ஏற்றார் ரஜினி. சந்திரமுகி, சிவாஜி ஆகிய இரு படங்களிலும் அவர் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறவில்லை.
இந் நிலையில் இரு துருவங்களும் ஒரு மேடையில் சந்திக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதும் கூட இதுவே முதல் முறையாகும்.
தங்கர் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் 100வது நாள் விழாவில் தான் இந்த அதிசயம் நடக்கப் போகிறது.
நூறாவது நாள் விழாவை பிரமாண்டமாக கொண்டாட நினைத்தார் தங்கர். உடனடியாக கருணாநிதி வீட்டுக்கும், ரஜினி வீட்டுக்கும் ஓடினார். இருவரையும் விழாவுக்கு வருமாறு அழைத்தார். கூடவே, ராமதாஸையும் அழைக்கவுள்ளேன் என்றும் அவர்களிடம் சொல்லி வைத்தார். அதற்கு இருவருமே ஆட்சேபிக்கவில்லையாம்.
இதையடுத்து தைலாபுரம் தோட்டம் சென்று ராமதாஸை சந்தித்து, விஷயத்தைச் சொல்லி அவரது ஒப்புதலையும் பெற்றார்.
விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், நடைபெறும் இடம், தினம், நேரம் ஆகியவை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தங்கர் தெரிவித்துள்ளார்.
திமுக-பாமக மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் இவர்களை ஒரே மேடைக்குக் கொண்டு வர ஓடியாடிக் கொண்டிருக்கிறார் தங்கர்.
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!