Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கலைஞரின் அடுத்த 'ரிலீஸ்': சிரிப்பொலி, சித்திரம்!
நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்காக சிரிப்பொலி என்ற சேனலையும், சிறுவர்களுக்காக சித்திரம் எனும் புத்தம் புதிய சேனலையும் விரைவில் ஒளிபரப்ப உள்ளது.
2007-ம் ஆண்டு துவங்கப்பட்ட கலைஞர் தொலைக்காட்சி மிக்க்குறுகிய காலத்தில் தமிழ் தொலைக்காட்சிகளுள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை 64 சதவிகித மார்க்கெட்டைப் பிடித்து முதலிடத்தில் இருப்பது சன் குழும சேனல்கள்தான்.
அதற்கடுத்து கலைஞர் தொலைக்காட்சி 14 சதவிகித மார்கெட் மதிப்பைப் பெற்றுள்ளது. விஜய், ஜெயா தொலைக்காட்சிகள் தலா 7 சதவிகிதம் மட்டுமே பெற்றுள்ளன. வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கும் மக்கள் தொலைக்காட்சிக்கு 3 சதவிகிதம் மட்டுமே கிடைத்துள்ளது.
தற்போது கலைஞர் இசையருவி, கலைஞர் செய்திகள் எனும் இரு கூடுதல் சேனல்களுடன் இயங்கி வருகிறது. கலைஞர் செய்தி சில தினங்களுக்கு முன்புதான் துவங்கப்பட்டது. இது 24 மணி நேர செய்திச் சேனல்.
அடுத்து முழுக்க முழுக்க நகைச்சுவை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் திரைத் துணுக்குகளை மையமாகக் கொண்ட 24 மணிநேர நகைச்சுவை சேனலை அறிமுகப்படுத்துகிறது கலைஞர். இந்த சேனல் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும். எஸ்வி சேகர், சோ போன்ற பிரபல நாடக ஆசிரியர்களின் புகழ்பெற்ற நாடகத் தொடர்களும் இதில் ஒளிபரப்பாக உள்ளது.
அதேபோல சிறுவர்களுக்காக சித்திரம் எனும் 24 மணி நேர கார்ட்டூன் மற்றும் சிறுவர் நிகழ்ச்சி சேனலும் ஆரம்பிக்கப்பட உள்ளது. இத்தகவல்களை கலைஞர் தொலைக்காட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.