Don't Miss!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மன்சூர் அலிகானின் 'தமிழ்ப் பேரரசு' கட்சி!
இது குறித்து திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
ஈழத்தமிழர் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடகமாடுகின்றன. இலங்கையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரசுடன் சேர்ந்து திமுகவும் இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
ஈழதமிழர் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் கொள்ளிடத்தில் இருந்து கும்பகோணம் வரை நடை பயணம் நடத்தப்பட்டது. நானும் அதில் பங்கேற்றேன். இப்போது காங்கிரஸ் வாழ்க என்று விடுதலை சிறுத்தைகள் கூறிக்கொண்டு அவர்கள் பின்னால் செல்கிறார்கள். மக்களை ஏமாற்றி பார்க்கிறார்கள். ஆனால் உண்மையான தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும், பாமகவுக்கும் முழு பொறுப்பு உண்டு.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நான் சில தொகுதிகளில் கருத்து கணிப்பு நடத்தி மக்களின் எண்ணங்களை தெரிந்து கொண்டேன். ஒரு காலத்தில் அரசியல் பிரமுகர்கள் ஊழல் பெருச்சாளிகளாக இருந்தார்கள். அவர்கள் ஊழல் காண்டாமிருகமாக மாறி வருவதை மக்கள் விரும்பவில்லை.
எவ்வித ஆதாயத்தை எதிர்ப் பாக்காமல் மக்கள் எண்ணங்களை பூர்த்தி செய்ய 'தமிழ்ப் பேரரசு' என்ற அரசியல் கட்சியை இன்னும் 6 மாதத்துக்குள் தொடங்குவேன்.
வரும் தேர்தலில் தனி ஆளாக நின்று போட்டியிடுவேன். திமுக, பாமக, தேமுதிக போட்டியிடும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவேன் என்றார்.