Don't Miss!
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- News வெய்யிலே வெய்யிலே.. இன்று தமிழகமெல்லாம் "வீசுது வெப்ப அலை".. பொதுசுகாதார துறையின் அதிரடியை பாருங்க
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மன்சூர் அலிகானின் 'தமிழ்ப் பேரரசு' கட்சி!
இது குறித்து திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
ஈழத்தமிழர் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடகமாடுகின்றன. இலங்கையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரசுடன் சேர்ந்து திமுகவும் இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
ஈழதமிழர் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் கொள்ளிடத்தில் இருந்து கும்பகோணம் வரை நடை பயணம் நடத்தப்பட்டது. நானும் அதில் பங்கேற்றேன். இப்போது காங்கிரஸ் வாழ்க என்று விடுதலை சிறுத்தைகள் கூறிக்கொண்டு அவர்கள் பின்னால் செல்கிறார்கள். மக்களை ஏமாற்றி பார்க்கிறார்கள். ஆனால் உண்மையான தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும், பாமகவுக்கும் முழு பொறுப்பு உண்டு.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நான் சில தொகுதிகளில் கருத்து கணிப்பு நடத்தி மக்களின் எண்ணங்களை தெரிந்து கொண்டேன். ஒரு காலத்தில் அரசியல் பிரமுகர்கள் ஊழல் பெருச்சாளிகளாக இருந்தார்கள். அவர்கள் ஊழல் காண்டாமிருகமாக மாறி வருவதை மக்கள் விரும்பவில்லை.
எவ்வித ஆதாயத்தை எதிர்ப் பாக்காமல் மக்கள் எண்ணங்களை பூர்த்தி செய்ய 'தமிழ்ப் பேரரசு' என்ற அரசியல் கட்சியை இன்னும் 6 மாதத்துக்குள் தொடங்குவேன்.
வரும் தேர்தலில் தனி ஆளாக நின்று போட்டியிடுவேன். திமுக, பாமக, தேமுதிக போட்டியிடும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவேன் என்றார்.
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!