இந்திக்குப் போகும் நாடோடிகள்!

சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக் கனியை நடிகராக அறிமுகப்படுத்தி தன்னுடன் நடிக்க வைத்தார் சசிக்குமார். பெரிய இயக்குநராக சமுத்திரக் கனி அப்போது ஹிட் ஆகியிருக்காவிட்டாலும் கூட இயல்பான நடிகராக அசத்தியிருந்தார்.
இந்த நிலையில் சமுத்திரக்கனி இயக்கி நாடோடிகள் படத்தில் நடிகராக மட்டும் பங்கேற்றார் சசிக்குமார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். போட்ட இடமெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது நாடோடிகள்.
இந்த வேகத்தில் இப்போது இந்திக்கும் இப்படத்தைக் கொண்டு போகிறார் சமுத்திரக் கனி. அவரே இந்தியிலும் இயக்கப் போகிறார். ஷாஹித் கபூர், ஸ்லம்டாக் மில்லியனர் படப் புகழ் தேவ் படேல் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனராம்.
படத்தின் நாயகி உள்ளிட்ட இதர கலைஞர்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.
மும்பையைச் சேர்ந்த குளோபல் இன்போன்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
முன்பை விட சமீப காலமாக அதிக அளவிலான தமிழ்ப் படங்கள் இந்திக்குப் போக ஆரம்பித்துள்ளன. கஜினியின் மெகா ஹிட்டுக்குப் பின்னர் சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களை இந்திக்காரர்கள் ரீமேக்க ஆர்வம் காட்டுகின்றனராம்.
கஜினி 'ஹிட்'டை வெல்லுமா நாடோடிகள்..?


Click it and Unblock the Notifications











