Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
'நிழல்கள் முதல் எந்திரன் வரை...': வெளியாகும் வைரமுத்துவின் பாடல் தொகுப்பு!
இளையராஜா இசையில், பாரதிராஜா இயக்கத்தில் உருவான நிழல்கள் படத்தில் இடம் பெற்ற 'பொன்மாலைப் பொழுது...' தான் கவிஞர் வைரமுத்துவின் முதல் திரைப்பாடல். அதன் பிறகு தமிழ் திரையுலக ரசிகர்களின் பல பொழுதுகளை ஆக்கிரமித்துக் கொண்டன அவர் பாடல்கள், இசைஞானியின் உதவியுடன்.
பத்தாண்டு நெடிய பயணத்துக்குப் பிறகு இளையராஜாவை விட்டுப் பிரிந்தார் வைரமுத்து. அந்த ஆரம்ப நாள்களில் வைரமுத்துவின் பயணம் சற்றுத் தடுமாறினாலும், சந்திரபோஸ் கைகொடுத்தார். பின்னர் வித்யாசாகர், ரஹ்மான், தேவா என புதுப்புது இசையமைப்பாளர்களுடன் கை கோர்த்து, அதே மிடுக்குடனும், செறிவுடனும் திரைப் பயணத்தைத் தொடர்ந்தார்.
கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் 7000 பாடல்களை எழுதியுள்ளார் வைரமுத்து.
இவற்றில் நிழல்கள் முதல் எந்திரன் வரை அவர் எழுதிய 1000 பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பாக வெளியிடுகிறார்.
இந்தத் தொகுப்பின் சிறப்பு அம்சம், ஒவ்வொரு பாடலுக்கும் வைரமுத்து தன் பாணியில் முன்னுரை ஒன்றையும் தந்துள்ளதுதான்.
நிழல்கள் படத்தில் இடம் பெற்ற அவரது முதல் பாடலான 'பொன்மாலைப் பொழுது…" பாடல் தொடங்கி, ரஜினியின் எந்திரன் படத்தில் இடம் பெற்ற 'அரிமா அரிமா ஆயிரம் அரிமா" பாடல் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் ஜனவரி 2-ம் தேதி நடக்கிறது. முதல்வர் கருணாநிதி புத்தகத்தை வெளியிட, சூப்பர் ஸ்டார் ரஜினியும் கமல்ஹாஸனும் இணைந்து இந்த நூலைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா இருவரும் விழாவுக்கு முன்னிலை வகிக்கிறார்கள்.
கவிஞர் வாலி, இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துகின்றனர்.
பிரபல பின்னணி பாடகர்கள் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாடகிகள் பி.சுசீலா, எஸ்.ஜானகி உள்ளிட்டோர், இந்தத் தொகுப்பிலுள்ள பாடல்கள் சிலவற்றை மேடையில் பாடுகிறார்கள்.