Don't Miss!
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
25 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஜென்ஸி!

-நினைக்கும்போதே, ஞாபகங்களில் ஒரு தேன்நதி ஓடும் பரவசம் தெரிகிறதல்லவா... இசைஞானியின் மயக்கும் இசையில், ஜென்ஸியின் சிலிர்க்கும் குரலில் 25 ஆண்டுகளுக்கு முன் வெளியான அமுத கானங்கள் இவை.
இந்தப் பாடலைப் பாடிய ஸ்டார் பாடகி ஜென்ஸி, அலைகள் ஓய்வதில்லை வரை ரசிகர்களைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தார், தன் அருமையான குரல் வளத்தினால். ஆனால் ஒரு கட்டத்தில் என்ன ஆனார் என்றே தெரியாமல் போய்விட்டது.
கேரளாவைச் சேர்ந்த இவர், சில காலம் தேவாலயங்களில் பக்திப் பாடல்கள் படுவதாக விகடன் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனாலும் அவரது திரையுலக மறுபிரவேசம் பற்றி எதுவும் சொல்லவில்லை.
இப்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் பாட வருகிறார்.
சேவலுக்குப் பிறகு, ஜின்னா தயாரிக்கும் சரவெடி என்ற புதிய படத்துக்காக, 'எனக்குள் எவனோ அவனே இவனோ...விரும்பி அழைத்தேன்...திரும்பி நடந்தான்...' என்ற பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடலை கபிலன் எழுதியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவுக்கு புதிய வண்ணம் தந்த ஜாம்பவான் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன், இந்த படத்தை இயக்குகிறார்.
ஜென்சியை மீண்டும் பாட வைத்தது பற்றி டைரக்டர் ஜான் மகேந்திரன் கூறியதாவது:
சரவெடி படத்துக்காக கபிலன், ஒரு மென்மையான பாடலை எழுதியிருந்தார். அந்த பாடலை, காதல் ஓவியம்... போன்ற இனிமையான பாடல்களை பாடிய ஜென்சி பாடினால் பொருத்தமாக இருக்கும் என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிடம் சொன்னேன்.
அவரும் ஆர்வமாகிவிட, இருவரும் சேர்ந்து அவரை தேட ஆரம்பித்தோம். அவர் துபாயில் இருப்பதாக சிலர் சொன்னார்கள். ஒரு மலையாள பாடகர் மூலம் அவருடைய முகவரியும், டெலிபோன் எண்களும் கிடைத்தன. நாங்கள் அந்த எண்ணுக்கு போன் செய்தபோது, ஜென்ஸியே எடுத்துப் பேசினார்.
எங்களின் விருப்பத்தை தெரிவித்ததும், 'கடைசியாக நான் பாடி 25 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது என் குரல் எப்படி இருக்குமோ... ரசிகர்களுக்குப் பிடிக்குமோ இல்லையோ...' என்று தயங்கினார். மெட்டைக் கேளுங்கள். அதன்பிறகு முடிவு செய்யுங்கள்... என்றோம் நாங்கள். அதன் பிறகே அவர் செனனை வந்தார்.
மெட்டைக் கேட்டதும் அவருக்கும் பிடித்துவிட்டது. பாட சம்மதித்து, இப்போது பாடியும் கொடுத்துவிட்டார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் ஜஸ்ட் 2 மணி நேரம்தான், என்றார் ஜான்.
ரொம்ப ஆர்வமா இருக்கில்ல... ஆனா இன்னும் இரண்டு மாதம் வெயிட் பண்ணனும் பாட்டைக் கேட்க!