Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கன்னடப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம்-ஜெயமாலா மகள் நாயகி!
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகி, இந்திய இசையமைப்பாளராக உயர்ந்து, இப்போது உலக இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக கன்னடப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
காட்பாதர் என்ற படத்திற்கு அவர்தான் இசையமைப்பாளர். உபேந்திரா மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் செளந்தர்யா நாயகியாக நடிக்கிறார். சிம்ரன் அம்மா வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் கதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த கதைதான். ஆம், அஜீத் நடித்த வரலாறு படத்தின் ரீமேக்தான் இது. இப்படத்தில் தந்தை அஜீத்துக்கு ஜோடியாக, கனிகா நடித்திருப்பார். அதாவது அம்மா வேடத்தில் அவர் அசத்தியிருப்பார்.
இப்போது கனிகா வேடத்தில் கன்னடத்தில் நடிக்கப் போவது நம்ம ஊர் சிம்ரன். மகன் உபேந்திராவின் ஜோடியாக வரப் போகிறார் செளந்தர்யா. இவர் அந்தக் கால கன்னட நாயகி ஜெயமாலாவின் மகள் ஆவார். இப்படம் மூலம் இவரும் சினிமாத் தொழிலுக்கு வருகிறார்.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது ஏ.ஆர்.ரஹ்மானின் இசைதான். முதல் முறையாக கன்னடப் படத்தில் ரஹ்மான் இசையமைக்கவிருப்பதால் கன்னடத் திரையுலகமே உற்சாகமாகியுள்ளது. அவரது முதல் கன்னட இசையை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
கன்னடத் திரையுலகுக்கு புதிய இசை அலையை ரஹ்மான் பரப்பப் போவதாக கருதுகிறார்கள். எப்படி தமிழில் ரஹ்மானின் இசை வந்த பிறகு புதிய அத்தியாயம் தொடங்கியதோ அதேபோல கன்னடத்திலும் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தப் படத்தில் இன்னொரு விசேஷமும் உள்ளது. அது பி.சி.ஸ்ரீராம். அவர்தான் இப்படத்தை இயக்கப் போகிறார்.