Don't Miss!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- News கன்னியாகுமரி எம்பி தொகுதி: துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஐஸ்வர்யா ராயுடன் பேசும் 'பாண்ட்' தயாரிப்பாளர்கள்!
புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட பட வரிசையில் 23 வது படம் தயாராகி வருகிறது. டேனியல் கிரெய்க் நடிக்கும் இந்தப் படம் 2010-ல் வெளிவந்தாக வேண்டும். காரணம் இரண்டாண்டு இடைவெளியில் ஒரு பாண்ட் படம் வரவேண்டும் என்பது அதன் தயாரிப்பாளர்களது திட்டம்.
இடையில் ஒரே ஒரு முறை இந்த இடைவெளி அதிகமாகி (6 ஆண்டுகள்) விட்டது.
கடைசியாக குவாண்டம் ஆப் ஸோலேஸ் 2008-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படத்துக்குப் பிறகு 23 வது ஜேம்ஸ்பாண்ட் படம் தயாராகி வருகிறது. இதில் நாயகி தேர்வு மட்டும் இன்னும் முடியவில்லை.
முதலில் ஸ்லம்டாக் மில்லியனேர் புகழ் பரீதா பிண்டோவை அணுகினர். பேச்சுவார்த்தை இன்னும் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், இப்போது ஐஸ்வர்யா ராயை அணுகியுள்ளார்களாம் ஜேம்ஸ்பாண்ட் தயாரிப்பாளர்கள்.
ஐஸ்வர்யா ராய் ஏற்கெனவே இரு நேரடி ஆங்கிலப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
எனவே இந்த பாண்ட் பட வாய்ப்பு சரியாக அமைந்தால் பயன்படுத்த தயாராகவே உள்ளாராம். இந்த வாரம் யார் ஜேம்ஸ்பாண்ட் ஹீரோயின் என்பது தெரிந்துவிடும்!