twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐஸ்வர்யா ராயுடன் பேசும் 'பாண்ட்' தயாரிப்பாளர்கள்!

    By Staff
    |

    Aishwarya Rai
    அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நாயகியாக நடிக்கப் போகும் நடிகை யார் என்பதில் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள்.

    புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட பட வரிசையில் 23 வது படம் தயாராகி வருகிறது. டேனியல் கிரெய்க் நடிக்கும் இந்தப் படம் 2010-ல் வெளிவந்தாக வேண்டும். காரணம் இரண்டாண்டு இடைவெளியில் ஒரு பாண்ட் படம் வரவேண்டும் என்பது அதன் தயாரிப்பாளர்களது திட்டம்.

    இடையில் ஒரே ஒரு முறை இந்த இடைவெளி அதிகமாகி (6 ஆண்டுகள்) விட்டது.

    கடைசியாக குவாண்டம் ஆப் ஸோலேஸ் 2008-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படத்துக்குப் பிறகு 23 வது ஜேம்ஸ்பாண்ட் படம் தயாராகி வருகிறது. இதில் நாயகி தேர்வு மட்டும் இன்னும் முடியவில்லை.

    முதலில் ஸ்லம்டாக் மில்லியனேர் புகழ் பரீதா பிண்டோவை அணுகினர். பேச்சுவார்த்தை இன்னும் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், இப்போது ஐஸ்வர்யா ராயை அணுகியுள்ளார்களாம் ஜேம்ஸ்பாண்ட் தயாரிப்பாளர்கள்.

    ஐஸ்வர்யா ராய் ஏற்கெனவே இரு நேரடி ஆங்கிலப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

    எனவே இந்த பாண்ட் பட வாய்ப்பு சரியாக அமைந்தால் பயன்படுத்த தயாராகவே உள்ளாராம். இந்த வாரம் யார் ஜேம்ஸ்பாண்ட் ஹீரோயின் என்பது தெரிந்துவிடும்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X