Don't Miss!
- News தப்பி தவறி கூட.. இந்த டைம்ல வெளியே போகாதீங்க.. தமிழ்நாட்டிலும் வெப்ப அலை.. முக்கிய அறிவுரை!
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இலங்கைத் தமிழரின் கின்னஸ் சாதனைப் படத்துக்கு சென்சார் தடை
இதுவரை பல பிரிவுகளில் 58 கின்னஸ் சாதனைகளைப் படைத்தவரான சுரேஷ் ஜோக்கிம் இப்போது கனடாவில் வசிக்கிறார்.
மொத்தம் 12 நாட்களுக்குள் ஒரு படத்தின் ஷூட்டிங், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்தார். இது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றது.
மீரா ஜாஸ்மின், சுமன், விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்தை கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். திட்டமிட்டபடி சரியாக 12 நாட்களுக்குள் னைத்துப் பணிகளையும் முடித்துவிட்ட சுரேஷ், அந்தப் படத்தை தணிக்கைக் குழுவுக்குக் காட்டி சான்றிதழ் பெற முயன்றார்.
படத்தைப் பார்த்த அதிகாரிகள், படத்தில் இடம்பெறும் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பான காட்சிக்கு ஆட்சேபம் தெரிவித்ததுடன் சான்றிதழ் தரவும் மறுத்தனர்.
இதுகுறித்து டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, "இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி படத்தில் காட்சி இடம்பெற்றுள்ளது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து, மறு தணிக்கை குழுவினருக்கு படம் திரையிடப்படுகிறது. அப்போது, இலங்கை பிரச்சினை பற்றிய காட்சிக்கு விளக்கம் அளிக்கப்படும், என்று கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
புலிகள் குறித்துப் பேசினால்தான் தடுத்தார்கள். இப்போது தமிழர்கள் குறித்துப் பேசினாலே தடையா...?