Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இலங்கைத் தமிழரின் கின்னஸ் சாதனைப் படத்துக்கு சென்சார் தடை
இதுவரை பல பிரிவுகளில் 58 கின்னஸ் சாதனைகளைப் படைத்தவரான சுரேஷ் ஜோக்கிம் இப்போது கனடாவில் வசிக்கிறார்.
மொத்தம் 12 நாட்களுக்குள் ஒரு படத்தின் ஷூட்டிங், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்தார். இது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றது.
மீரா ஜாஸ்மின், சுமன், விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்தை கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். திட்டமிட்டபடி சரியாக 12 நாட்களுக்குள் னைத்துப் பணிகளையும் முடித்துவிட்ட சுரேஷ், அந்தப் படத்தை தணிக்கைக் குழுவுக்குக் காட்டி சான்றிதழ் பெற முயன்றார்.
படத்தைப் பார்த்த அதிகாரிகள், படத்தில் இடம்பெறும் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பான காட்சிக்கு ஆட்சேபம் தெரிவித்ததுடன் சான்றிதழ் தரவும் மறுத்தனர்.
இதுகுறித்து டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, "இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி படத்தில் காட்சி இடம்பெற்றுள்ளது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து, மறு தணிக்கை குழுவினருக்கு படம் திரையிடப்படுகிறது. அப்போது, இலங்கை பிரச்சினை பற்றிய காட்சிக்கு விளக்கம் அளிக்கப்படும், என்று கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
புலிகள் குறித்துப் பேசினால்தான் தடுத்தார்கள். இப்போது தமிழர்கள் குறித்துப் பேசினாலே தடையா...?