Don't Miss!
- News மருதாணி இலை.. கையில் ஹென்னா போட்டிருந்தால், ஓட்டுப்போட முடியாதா? சென்னை, திருவள்ளூரில் திடீர் பரபர
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தீபிகாவின் அதிருஷ்டத்தில் சுருண்ட சித்தார்த் மல்லையா!
ராயல் சேலஞ்சர்ஸ் விளையாடும் போது போட்டி மைதானத்தில் தீபிகா படுகோன் இருக்கிறார் என்றால், அந்த ஆட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் வெல்வது உறுதி.
இதுவரை பெரும்பாலான மேட்சுகளிலும் இப்படித்தான் நடந்திருப்பதாக ஐபிஎல் வட்டாரத்தினர் கூறுகின்றனர். இந்த மாஜிக் இதுவரை தோற்றதே இல்லையாம்.
இதனால் ராயல் சேலஞ்சர்ஸுக்கு மட்டுமல்லாது, அதன் உரிமையாளர் விஜய் மல்லையாவுக்கும் தீபிகா செல்லப் பிள்ளையாகி விட்டார். விஜய் மல்லையாவுக்கு மட்டுமல்லாது அவரின் தவப்புதல்வன் சித்தார்த் மல்லையாவுக்கும் தீபிகாவை மிகவும் பிடித்துப் போய்விட்டது.
இதுபோதாதா... இவர்கள் இருவரையும் இணைத்து பல செய்திகள் பல மட்டங்களில் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று பாலிவுட்டில் தகவல்கள் பரபரவென பரவி வருகின்றன.
கடந்த ஆண்டில் ஐபிஎல் விளையாட்டின் போது ராயல் சேலஞ்சர் அணியை ஆதரிக்க சித்தார்த் வரவேயில்லை. இந்த முறை தீபிகாவை அணியின் தூதராக்கி விட்ட பின், அவர் வந்து கலந்துகொள்ளும் ஒரு ஆட்டத்தையும் தவறவிடுவதில்லை.
இந்த தகவல்கள் வலுவாக உலாவி வரும் நிலையில், சமீபத்தில் பெங்களூரில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டி ஒன்றில் தீபிகாவும், சித்தார்த்தும் ஒரே பகுதியில் இருந்தனர்.
அப்போது, ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றவுடன் மகிழ்ச்சியால் துள்ளி குதித்த சித்தார்த், உணர்ச்சி வசப்பட்ட நிலையில், அருகில் பலர் இருப்பதையும் பொருட்படுத்தாமல், தீபிகாவிடம் திரும்பி,
'நீ தான் என் லக்கி மஸ்கட். இன்றைக்கு இரவு உனக்கு மிகப் பெரிய பரிசு காத்திருக்கு' எனக் கூறியுள்ளார்.
அருகில் இருந்தவர்கள் இதை பார்த்ததைக் கவனித்த தீபிகா அதிர்ச்சியும், தர்மசங்கடமும் கலந்த கலவையான முகபாவத்துடன் நெளிந்து வழிந்தாராம்.
தற்போதைக்கு இந்த இரண்டு பேருமே பேச்சலர்ஸ் என்பதால், 'பெர்ஃபெக்ட் பேர்' என்று பலரும் தூபம் போட்டு வருகின்றனராம்.
'மேரேஜ் லீக்"கில் இணையுமா இந்த ஐபிஎல் ஜோடி...?