'வைகை'யைப் புகழும் கலா மாஸ்டர்!

மதுரை பின்னணியில், ஒரு நிஜ காதல் கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தப் படம் குறித்தும் அதன் நாயகன் பாலா (நாகரீகக் கோமாளியில் நடித்தவர்)குறித்தும் சமீபத்தில் பிரபல நடன இயக்குநர் கலா மானாட மயிலாட நிகழ்ச்சியில் மனம் திறந்து பாராட்டியது, படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது.
மானாட மயிலாட நிகழ்ச்சியின் இடையே கலா கூறுகையில்,
சமீபத்தில் வைகை படம் பார்த்தேன். மிக அருமையாக இயல்பாக நடித்திருந்தார் பாலா. எந்தக் காட்சியிலும் ஓவர் ஆக்டிங்கே இல்லை.
இதே மானாட மயிலாட நிகழ்ச்சியில் மிகச்சிறந்த பர்பார்மன்ஸுக்காக முதல்பரிசு வாங்கியவர் பாலா என்பதில் எனக்கு கூடுதல் பெருமை. நிச்சயம் இந்தப் படம் பெரிய வெற்றி பெறும்...என்றார் கலா.
பாலாவும் ப்ரியதர்ஷினியும் மானாட மயிலாட இறுதிச் சுற்றில் வென்றி பரிசு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!


Click it and Unblock the Notifications











