Don't Miss!
- News கடும் வெயில்.. வெப்ப அலை.. வாக்களிக்க போகிறீர்களா? அதிகாரிகள் சொன்ன முக்கிய அறிவுரை!
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'ஜஸ்ட்' பத்தே நிமிடத்தில் கருணாநிதி எழுதிய டூயட் பாடல்!
முதல்வர் கருணாநிதியின் கதை - வசனத்தில் 'பெண்சிங்கம்' படம் தயாராகி வருகிறது. உதய்கிரண், மீராஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜெ.நந்தினி ஆர்ட்ஸ் சார்பில் ஆறுமுகனேரி எஸ்.பி.முருகேசன் தயாரிக்கிறார். பாலிஸ்ரீரெங்கன் இயக்குகிறார்.
இப்படத்துக்காக தேவா இசையில் முதல்வர் கருணாநிதி பத்தே நிமிடங்களில் டூயட் பாடலொன்றை எழுதியுள்ளார். அந்தப் பாடல்:
பல்லவி
சூர்யா: ஆகா! வீணையில் எழுவது வேணு கானமா?
திருவாடுதுறையின் தோடி ராகமா?
திருவெண்காட்டு மகுடி நாதமா?
இசைவதாலே இணையும் ஈருயிர்கள்;
இணைந்த பின்பு இரண்டும் ஒருயிர் தானே?
மேகலா: இசைவதாலே இணையும் ஈருயிர்கள்;
இணைந்த பின்பு இரண்டும் ஒருயிர் தானே?
முதல் சரணம்
சூர்யா: காலை அரும்பி!
மாலை மலரும்!
காதல் நோயால் நானும் உருகினேன்!
மேகலா: காலை அரும்பி!
மாலை மலரும்!
காதல் நோயால் நானும் உருகினேன்!
சூர்யா: கோகில வாணி நீயே;
கொடுமுடி கோகிலம் தானே?
கொள்ளை கொண்டாய் நெஞ்சத்தினை
கொடுத்து விடு எடுத்தபடியே!
மேகலா: தேனும் பாலும் கலந்த பின்னே
தனியே சுவையை பிரிக்கலாகுமா?
சூர்யா: இனிக்கும் தேனாய் நீயும்
துடிக்கும் ஆண் பாலாய் நானும்
திருமணம் ஆன பின்னால்
தேனும் பாலும் ஆகலாம்!
மேகலா: ஆயிரம் இரவுகள் உண்டு எப்போதும்!
பாயிரம் பாடினால் போதும் இப்போது!
இருவரும்: செம்புலப் பெய் நீர் போல
அன்புடை நெஞ்சால் நாம் கலந்தோமே!
ஆகா! வீணையில் எழுதுவது வேணு கானமா?
திருவாடுதுறையின் தோடி ராகமா?
திருவெண்காட்டு மகுடி நாதமா?
இசைவதாலே இணையும் ஈருயிர்கள்;
இணைந்த பின்பு இரண்டும் ஒருயிர் தானே?