twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஜஸ்ட்' பத்தே நிமிடத்தில் கருணாநிதி எழுதிய டூயட் பாடல்!

    By Staff
    |

    Karunanidhi
    பெண் சிங்கம் படத்தில் இடம்பெறும் ஒரு டூயட் பாடல் வெறும் பத்து நிமிடத்தில் எழுதி முடித்தாராம் முதல்வர் கருணாநிதி.

    முதல்வர் கருணாநிதியின் கதை - வசனத்தில் 'பெண்சிங்கம்' படம் தயாராகி வருகிறது. உதய்கிரண், மீராஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜெ.நந்தினி ஆர்ட்ஸ் சார்பில் ஆறுமுகனேரி எஸ்.பி.முருகேசன் தயாரிக்கிறார். பாலிஸ்ரீரெங்கன் இயக்குகிறார்.

    இப்படத்துக்காக தேவா இசையில் முதல்வர் கருணாநிதி பத்தே நிமிடங்களில் டூயட் பாடலொன்றை எழுதியுள்ளார். அந்தப் பாடல்:

    பல்லவி

    சூர்யா: ஆகா! வீணையில் எழுவது வேணு கானமா?
    திருவாடுதுறையின் தோடி ராகமா?
    திருவெண்காட்டு மகுடி நாதமா?
    இசைவதாலே இணையும் ஈருயிர்கள்;
    இணைந்த பின்பு இரண்டும் ஒருயிர் தானே?
    மேகலா: இசைவதாலே இணையும் ஈருயிர்கள்;
    இணைந்த பின்பு இரண்டும் ஒருயிர் தானே?

    முதல் சரணம்

    சூர்யா: காலை அரும்பி!
    மாலை மலரும்!
    காதல் நோயால் நானும் உருகினேன்!

    மேகலா: காலை அரும்பி!
    மாலை மலரும்!
    காதல் நோயால் நானும் உருகினேன்!

    சூர்யா: கோகில வாணி நீயே;
    கொடுமுடி கோகிலம் தானே?
    கொள்ளை கொண்டாய் நெஞ்சத்தினை
    கொடுத்து விடு எடுத்தபடியே!

    மேகலா: தேனும் பாலும் கலந்த பின்னே
    தனியே சுவையை பிரிக்கலாகுமா?

    சூர்யா: இனிக்கும் தேனாய் நீயும்
    துடிக்கும் ஆண் பாலாய் நானும்
    திருமணம் ஆன பின்னால்
    தேனும் பாலும் ஆகலாம்!

    மேகலா: ஆயிரம் இரவுகள் உண்டு எப்போதும்!
    பாயிரம் பாடினால் போதும் இப்போது!

    இருவரும்: செம்புலப் பெய் நீர் போல
    அன்புடை நெஞ்சால் நாம் கலந்தோமே!
    ஆகா! வீணையில் எழுதுவது வேணு கானமா?
    திருவாடுதுறையின் தோடி ராகமா?
    திருவெண்காட்டு மகுடி நாதமா?
    இசைவதாலே இணையும் ஈருயிர்கள்;
    இணைந்த பின்பு இரண்டும் ஒருயிர் தானே?

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X