Don't Miss!
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Technology சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
டைரக்டர் செல்வா கொலை வழக்கு: நடிகை தப்பி ஓட்டம்
செல்வா எனும் அறிமுக இயக்குநர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ம் தேதி குடி போதையில் படுகொலை செய்யப்பட்டார்.
அவர் கொலையுண்ட தினத்தன்று புதுமுக நடிகை சங்கீதாதான் அவருடன் தங்கியிருந்ததாக விசாரணையில் தெரிந்தது. சங்கீதாவை போலீசார் கைது செய்தனர்.
சங்கீதா மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு கோர்ட்டில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், டைரக்டர் செல்வா கொலை வழக்கில் வேறு பின்னணி இருப்பதாகவும், இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று செல்வாவின் மனைவி மைதிலி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது நீதி மன்றம். இதனால் சங்கீதா நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டது. செல்வாவின் மனைவி மைதிலி, பட அதிபர் நடராஜன் மற்றும் செல்வாவின் தங்கை ஆகியோரிடம் விசாரணை நடந்தது. நடராஜன் செல்வா டைரக்ஷனில் படம் தயாரித்தார். அதில் ஏற்பட்ட மோதலில் செல்வா கொல்லப்பட்டாரா? என்றும் போலீசார் விசாரித்தனர்.
ஆனால் செல்வா கொலைக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்று கூறிவிட்டார் நடராஜன். அடுத்த கட்டமாக மீண்டும் நடிகை சங்கீதாவிடம் போலீசார் விசாரித்தனர்.
ஒருகட்டத்தில் நடிகை சங்கீதாதான் இந்த கொலை வழக்கில் குற்றவாளி என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். சங்கீதா மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சங்கீதா ஏற்கனவே போதைக்கு அடிமையாகி 2 முறை தற்கொலை செய்துகொள்ள முயன்றார். போலீசார் காப்பாற்றி அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், சங்கீதா திடீரென்று தலைமறைவாகி விட்டார். விசாரணையின்போது அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?