Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரூ.48 கோடிக்கு சுறாவை வாங்கிய சன்!
விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தை சமீபத்தில் சன் வெளியிட்டது. இந்தப் படத்தை வாங்கியபோதே, விஜய்யின் 50வது படமான சுறாவையும் தங்களுக்கே தரவேண்டும் என ஒப்பந்தம் போட்டது சன் என்கிறார்கள்.
வேட்டைக்காரன் வெளிவந்து, போதிய வரவேற்பைப் பெறாத நிலையில், சங்கிலி முருகன் தயாரித்து வரும் விஜய்யின் 50வது படத்தை முன்பு பேசிய விலையை விட குறைவான தொகைக்குத்தான் வாங்கிக் கொள்ள முடியும் என சன் கூறிவிட்டதாம்.
இந்த விஷயத்தில் ஏற்கெனவே அனுபவசாலி சங்கிலி. முன்பு விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தை அவர்தான் தயாரித்தார். படம் நன்றாக வந்திருந்தும், கொஞ்சம் ஸ்லோவாக இருப்பதாக நண்பர்கள் கூறியதால், வந்த விலைக்கு ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு விற்றார்.
ஆனால் ஆஸ்கர் ரவியின் நேரம், அந்தப் படம் பிளாக் பஸ்டராகி கோடிகளில் அள்ளிக் கொடுத்தது. பின்னர், வந்த லாபத்தில் சங்கிலி முருகனுக்கு ஒரு தொகையை ஆஸ்கர் கொடுத்ததாகச் சொல்லப்பட்டது.
இப்போது, கிட்டத்தட்ட அதே பாணியில்தான் சுறாவை விற்றுள்ளார் சங்கிலி. ஆனால் அவரைப் பொறுத்தவரை பிஸினஸ் லாபம் என்கிறார்கள். சுறாவின் கதை, மலையாளத்தில் வந்த சோட்டா மும்பை என்பதாலும், அதை கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே எடுக்கப் போவது தெரிந்ததாலும்தான், தைரியமாக வாங்கியுள்ளார்களாம் சன்.
இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, உலக உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் (perpetual rights) ஒட்டு மொத்தமாக சன்னுக்கு கொடுத்துள்ளார் சங்கிலி என்பது குறிப்பிடத்தக்கது.