twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிசம்பர் 15 முதல் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா!

    By Chakra
    |

    Fiml Festival
    சென்னை: எட்டாவது சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது.

    டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவை, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தொடங்கி வைக்கிறார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ், பிலிம் சேம்பர், ஐநாக்ஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

    துருக்கி, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், கனடா உள்ளிட்ட 43 நாடுகளைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், தமிழில் நந்தலாலா, அங்காடித் தெரு உட்பட 12 திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.

    மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட திரையரங்க வளாகங்களில் சினிமா குறித்த விவாதங்களும் நடைபெறுகின்ரன.

    அனைத்துப் படங்களையும் பார்ப்பதற்கு சிறப்பு நுழைவுச் சீட்டு 500 விலையில், பிலிம் சேம்பரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நேற்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் எஸ்வி சேகர், நடிகைகள் சுஹாஸினி மற்றும் ரேவதி ஆகியோர் பங்கேற்று இந்த விழா குறித்து விரிவாகப் பேசினர்.

    திரைப்பட விழா குழுவைச் சேர்ந்த சந்தானம், தங்கராஜ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    English summary
    8th International film festival will be begins in Chennai from December 15th. The festival continues till 23rd of this month in Chennai Inox, Woodlands and Film Chamber. 130 films from 43 countries under various category will be screened in this festival.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X